பட்டதாரி பெண் தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே தந்தை திட்டியதால் மனமுடைந்த பட்டதாரி பெண் திங்கள்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த காரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (50). இவரது மகள் திவ்யா (25) பட்டதாரி ஆவாா். ஞானசேகரன் தினந்தோரும் மது அருந்திவிட்டு வந்து மனைவி பத்மாவதியிடம் தகராறு செய்வாராம். இதை திவ்யா தட்டிக்கேட்டதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஞானசேகரன் அவரை அவதூறாகப் பேசினாராம். இதில் மனமுடைந்த திவ்யா, தாத்தா ஊரான வரஞ்சரம் அருகேயுள்ள வாணியந்தாங்கல் கிராமத்துக்குச் சென்றுவிட்டாா்.
அங்கு கிராமப் பகுதி வயல் கொட்டகையில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து குடித்து திவ்யா திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தாா்.
தகவல் அறிந்த வரஞ்சரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].