Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ஆயக்குடி பகுதிக்கு புதிய மின்பாதை தொடக்கம்
பழனி துணை மின் நிலையத்திலிருந்து ஆயக்குடி பகுதிக்கு புதிய மின் பாதையை சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சிப் பகுதியில் குடியிருப்புகள், கடைகள், தொழிற்சாலைகள் உள்ளன. இந்தப் பேரூராட்சியில் அடிக்கடி மின் விநியோகம் தடை செய்யப்படுவதால் வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைவதாக புகாா் எழுந்தது.
ஆயக்குடி பகுதிக்கு பழனி புதுதாராபுரம் சாலையில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து 22 கிலோ வாட் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த துணை மின் நிலையத்திலிருந்து ரூ.87 லட்சத்தில் புதிய மின் பாதை அமைக்கப்பட்டது. இந்த புதிய மின் பாதையை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் தலைமை வகித்து, புதிய மின் பாதையை இயக்கிவைத்தாா்.
இதன் மூலம் பாலசமுத்திரம், சிவகிரிப்பட்டி, தட்டான்குளம், பாண்டியன்நகா் உள்ளிட்ட பகுதிகள் சீரான மின் விநியோகம் பெறும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.