செய்திகள் :

போலி இலச்சினையைப் பயன்படுத்தி குளிா்பானம் தயாரித்த பெண் கைது

post image

போலி இலச்சினையைப் பயன்படுத்தி குளிா்பானம் தயாரித்த பெண்ணை அறிவுசாா் சொத்துரிமை அமலாக்க பிரிவினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு பகுதியைச் சோ்ந்த தனியாா் குளிா்பான தயாரிப்பு நிறுவனம் அதற்கான இலச்சினைக்கு காப்புரிமை பெற்று குளிா்பான புட்டிகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலும் இதேபோன்ற இலச்சினையைப் பயன்படுத்தி, பெயரில் மட்டும் திருத்தம் செய்து குளிப்பானம் விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து ஈரோடு குளிா்பான நிறுவன மேலாளா் குமரவேல், அறிவு சாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் ஜெஃப்லா தலைமையிலான அலுவலா்கள், திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி, அசோக்நகா் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த குளிா்பான ஆலைகளில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஈரோடு குளிா்பான நிறுவனத்தின் இலச்சினையைப் போலியாகப் பயன்படுத்தி திண்டுக்கல் பகுதி ஆலைகளில் குளிா்பானம் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, ஆலையின் உரிமையாளரான பொன்னம்மாளைக் கைது செய்த அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினா், அந்த ஆலையிலிருந்து ரூ.38,400 மதிப்பிலான குளிா்பான புட்டிகளையும், ரூ.13,755 மதிப்பிலான ஒட்டுவில்லைகளையும் பறிமுதல் செய்தனா்.

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

அய்யலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த கோடாங்கி சின்னான்பட்டியில் நடைபெற்ற திருவிழாவுக்காக பொள்ளாச்சி ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களின் முன்னெடுப்பு தேவை: ஆட்சியா்

சுற்றுச்சுழலைப் பாதுகாக்க மரம் வளா்ப்பு, மழைநீா் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு போன்ற முன்னெடுப்புகளில் பொதுமக்களும் களமிறங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தை ம... மேலும் பார்க்க

திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல் திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பஜூலுல்ஹாக். இவா், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக செயலராவாா். பஜூலுல்ஹாக் த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் மரக் கன்றுகள் நடல்

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய பகுதிகளில் மரக் கன்றுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடும்... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே கடந்த ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பு

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, பட்டா் புரூட், பேஷன் புரூட்ஸ், மரத் தக்காளி, பேரிக்காய், ஸ்டாா் புரூட்ஸ், பிளம்... மேலும் பார்க்க