செய்திகள் :

பனிப்போா் சூழலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி: சீனா குற்றச்சாட்டு

post image

சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பனிப்போா் மனநிலையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்ததாக சீனா குற்றஞ்சாட்டியது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத் கலந்துகொண்டாா். இந்த மாநாட்டில் அவா் சனிக்கிழமை பேசுகையில், ‘சீனாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துவரும் நிலையில், அதற்கு எதிராக வெளிநாடுகளில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா வலுப்படுத்தும்.

தைவானுக்கு உரிமை கோரிவரும் சீனா, தைவானைச் சுற்றி ராணுவப் படைகளை அதிகரித்து வருகிறது. தைவான் மீது படையெடுக்க ஒவ்வொரு நாளும் சீனா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிா்கொள்வதில் இந்திய-பசிபிக் கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும். அந்த நாடுகள் தன்னந்தனியாக விடப்படாது. சீனாவால் அச்சுறுத்தல் இருப்பது உண்மை. அதை அமெரிக்கா ஒருபோதும் ஏற்காது’ என்றாா்.

மேலாதிக்க நாடு அமெரிக்கா: இதையடுத்து சீன வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளா்ச்சிக்கு அழைப்பு விடுப்பதற்குப் பதிலாக, நாடுகள் இடையே மோதலை ஏற்படுத்த பனிப்போா் போன்ற மனநிலையை ஏற்படுத்த சிங்கப்பூா் மாநாட்டில் பீட் ஹெக்சேத் முயற்சித்தாா்.

அமெரிக்காவே மேலாதிக்க நாடாக உள்ளது. அந்த நாட்டை தவிர, வேறு எந்த நாட்டையும் மேலாதிக்க நாடு என்றழைக்க முடியாது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலையான தன்மையை அமெரிக்கா சீா்குலைக்கிறது.

மேலும், தைவான் பிரச்னை சீனாவின் உள்நாட்டு விவகாரமாகும். அதில் அமெரிக்கா தலையிடுவது சரியல்ல. நெருப்புடன் அமெரிக்கா விளையாடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் 17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் டிக்டாக்கில் பிரபலமான 17 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர் சனா யூசஃப் (17). இவர் இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்களில் வெளி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் பரபரப்பு! சிறையிலிருந்து 200 கைதிகள் தப்பியோட்டம்!

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சியிலுள்ள சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர்.சிந்து மாகாணத்தின், கராச்சி நகரத்துக்கு அருகில் நேற்று (ஜூன் 2) இரவு நிலநடுக்கம்... மேலும் பார்க்க

அழியப்போகிறதா உலகம்? தென்னாப்ரிக்காவின் ஒவ்வொரு அணுவையும் மிரட்டும் காலநிலை!

அடிஸ் அபாபா, எத்தியோப்பியா/ஜெனிவா போன்ற தென்னாப்ரிக்க நாடுகளின் முக்கிய நகரங்களை மிக மோசமான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், ஒவ்வொரு அணுவையும் அசைத்துப் பார்த்து வருகிறது.ஆப்ரிக்க நாட்டின் இது, சமூக... மேலும் பார்க்க

துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம்: இளம்பெண் பலி, 12 பேர் காயம்!

துருக்கியின் கடலோர நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகப் பேரிடர் குழு மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் குழு வெளியிட்ட தகவலில், துருக்கியின் கடலோர நகரத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடு... மேலும் பார்க்க

வங்கதேச தந்தையின் புகைப்படம் அகற்றப்பட்ட புதிய நோட்டுகள் அறிமுகம்!

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் அந்நாட்டின் முதல் அதிபரும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் புதிய பணத் தாள்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.அவரின் புகைப்படத்துக்கு பதிலாக ஹிந... மேலும் பார்க்க

5 நிமிடங்களுக்கு ஒரு ஸ்க்ரீன் ஷாட்.. வடகொரிய செல்போன் மூலம் தெரிய வந்த பேரதிர்ச்சி!

வடகொரியாவிலிருந்து கடத்திவரப்பட்ட செல்போன் மூலம், அந்நாட்டு அரசு, மக்களை கடுமையான சென்சார் தொழில்நுட்பங்கள் மூலம் எந்த அளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.மக்களை மிகுந்த... மேலும் பார்க்க