செய்திகள் :

வங்கதேச தந்தையின் புகைப்படம் அகற்றப்பட்ட புதிய நோட்டுகள் அறிமுகம்!

post image

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் அந்நாட்டின் முதல் அதிபரும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் புதிய பணத் தாள்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அவரின் புகைப்படத்துக்கு பதிலாக ஹிந்து மற்றும் புத்த கோயில்கள், இயற்கை நிலப்பரப்பு மற்றும் பாரம்பரிய அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன.

வங்கதேசத்தில் மாணவர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமரும் ஷேக் முஜிபுரின் மகளுமான ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

கடந்தாண்டு புதிய அரசு பொறுப்பேற்றவுடன் புதிதாக அச்சடிக்கப்படும் 20, 100, 500, 1000 தாள்களில் ஷேக் முஜிபுர் படத்துக்கு பதிலாக மதம் தொடர்புடைய கட்டமைப்புகள், பாரம்பரிய சின்னங்களை மாற்ற மத்திய வங்கிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வங்கதேச மத்திய வங்கி புதிய நோட்டுகளை வெளியிட்டுள்ளது.

ஹிந்து மற்றும் புத்த கோயில்கள், வரலாற்று அரண்மனைகள், பிரிட்டிஷ் ஆட்சியில் வங்கதேச பஞ்சத்தை சித்தரிக்கும் ஓவியர் ஜைனுல் அபேதினின் ஓவியங்கள், பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவுச் சின்னம் உள்ளிட்டவை புதிய நோட்டில் இடம்பெற்றுள்ளன.

புதிய நோட்டுகள் படிப்படியாக நாடு முழுவதும் புழக்கத்துக்கு வரும் என்றும், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் இடம்பெற்றுள்ள பழைய நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஆன்லைன் விளையாட்டு: நேரக் கட்டுப்பாடு செல்லும் - உயர் நீதிமன்றம்

உக்ரைன் போரில் 3.50 லட்சம் வீரா்கள் உயிரிழப்பு: ஆய்வுத் தகவல்

உக்ரைனில் ரஷியா நடத்திவரும் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமாா் 3.5 லட்சம் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ‘போா் திட்டம் மற்றும் சா்வதேச ஆய்வு மையம்’ (சிஎஸ்ஐஎஸ்) தெரிவித்துள்ளது.இது குறித்து ... மேலும் பார்க்க

ஏவுகணைத் தாக்குதல்: சிரியா அரசு மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

சிரியாவில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு அந்த நாட்டு அரசுதான் காரணம் என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் பகுதியில் (படம்) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ‘மு... மேலும் பார்க்க

காஸாவில் உணவுப் பொருள் விநியோகம் நிறுத்தம்

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையங்களுக்கு செல்வோா் மீது இஸ்ரேல் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்துவதன் எதிரொலியாக அந்த விநியோகப் பணிகளை அமெரிக்கா ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 2 நாள்களில் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டுடனான பாகிஸ்தானின் எல்லையில், அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பழங்குடியின மக்கள் அதிகம் வாழும்,... மேலும் பார்க்க

இந்தியாவைத் துண்டுத் துண்டாக்குவோம் என்ற லஷ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் ஆஸிஸ் எசார் என்ற பயங்கரவாதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.காலை நேரத்தில், அப்துல் ஆஸ... மேலும் பார்க்க

ஆக்ரோஷத்தில் உக்ரைன்: கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் பயங்கர தாக்குதல்

ரஷியா - உக்ரைன் போர் தீவிரமடைந்து, ஆக்ரோஷ தாக்குதலில் ஈடுபட்டு வரும் உக்ரைன் கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளது.இதுவரை எதிர் தாக்குதலை உக்தியாகக் கையாண்டு வந்த உக்ரைன்... மேலும் பார்க்க