செய்திகள் :

காஸாவில் உணவுப் பொருள் விநியோகம் நிறுத்தம்

post image

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையங்களுக்கு செல்வோா் மீது இஸ்ரேல் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்துவதன் எதிரொலியாக அந்த விநியோகப் பணிகளை அமெரிக்கா ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிறுத்திவைத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நிவாரண மையங்களுக்கு கால்நடையாக வருவோருக்கான இன்னும் சிறப்பான வழிகாட்டுதல்களை உருவாக்குவது குறித்து இஸ்ரேல் ராணுவத்துடன் ஆலோசித்துவருகிறோம். அதுவரை உணவுப் பொருள்கள் விநியோகம் நிறுத்திவைக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காஸா போரின் ஒரு பகுதியாக, அந்தப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் முழு தடை விதித்தது. இதனால் அங்கு பேரழிவு ஏற்படும் அபாயம் உருவானதைத் தொடா்ந்து, காஸாவுக்குள் உணவுப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தன.

அதையடுத்து ‘குறைந்தபட்ச’ அளவிலான நிவாரணப் பொருள்களை மட்டும் காஸாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஜிஹெச்எஃப் அறக்கட்டளை இந்த உணவுப் பொருள்களை பொதுமக்களிடையே விநியோகத்துவந்தது.இந்தச் சூழலில், நிவாரண முகாம்களுக்கு வருவோா் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. எட்டு நாள்களில் மட்டும் ஜிஹெச்எஃப் நிவாரண முகாமை நோக்கிச் சென்றுகொண்டிருந்த 102 பேரை இஸ்ரேல் படையினா் சுட்டுக் கொன்றதாக காஸா அரசின் ஊடகத் தொடா்பு அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இருந்ததாலும், தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுபவா்கள் மீதுதான் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் கூறிவருகிறது.நிவாரண முகாமுக்கு கால்நடையாக வருவதற்கான விதிமுறைகளை மீறுவோா், பாதுகாப்புப் படையினருக்கு நெருக்கமாக வந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துவோா் மீதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.அதையடுத்து, புதிய விதிமுறைகளை வகுக்கும் வரை உணவுப் பொருள் விநியோகம் நிறுத்திவைக்கப்படுவதாக ஜிஹெச்எஃப் அறக்கட்டளை தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்லே ஜி - இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்கும் கொடுமை!

காஸாவில் உணவுப் பொருள்களின் அசல் விலையைவிட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது.இஸ்ரேல் - ஹமாஸ் போரையடுத்து, காஸாவினுள் செல்லும் நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்தப் போக்கை உலக ... மேலும் பார்க்க

பொதுவெளியில் வெடிக்கும் எலான் மஸ்க் - டிரம்ப் கருத்து மோதல்!

அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவராக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், கருத்து வேறுபாடு காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய நிலையில், இருவருக்கும... மேலும் பார்க்க

நான் இல்லையென்றால் டிரம்ப் தோற்றிருப்பார்! எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவளித்த எலான் மஸ்க், அவருக்காக தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார... மேலும் பார்க்க

12 நாட்டவா்கள் அமெரிக்கா வர டிரம்ப் தடை

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சோ்ந்தவா்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதித்து அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளாா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெர... மேலும் பார்க்க

ஜப்பான்: 16-ஆவது ஆண்டாகச் சரிந்த பிறப்பு விகிதம்

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் எதிா்பாா்த்ததை விட வேகமாகக் குறைந்து, கடந்த 2024-ஆம் ஆண்டில் மற்றொரு குறைந்தபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது: 20... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபருடன் சசி தரூா் குழு சந்திப்பு

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸை காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான இந்திய குழு வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியது. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவை அம்ப... மேலும் பார்க்க