செய்திகள் :

துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம்: இளம்பெண் பலி, 12 பேர் காயம்!

post image

துருக்கியின் கடலோர நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகப் பேரிடர் குழு மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்தக் குழு வெளியிட்ட தகவலில்,

துருக்கியின் கடலோர நகரத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அங்குள்ள குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியதில், வீட்டின் ஜன்னல் மற்றும் பால்கனிகளில் இருந்து குதித்தனர். இதனால் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில் இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த நிலநடுக்கமானது இன்று அதிகாலை 2.17 மணிக்கு ஏற்பட்டதாகவும், இது மத்திய தரைக் கடலில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. கிரேக்கத் தீவான ரோட்ஸ் உள்பட அண்டை பகுதிகளில் இது உணரப்பட்டது.

துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா வெளியிட்ட எக்ஸ் பதிவில், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பயத்தில் 14 வயது சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்தார். இளம்பெண்ணுக்கு முன்னதாக உடல்நிலையில் பாதிப்பு இருந்ததா என்பது தெரியவில்லை. கூறினார்.

நிலநடுக்க பீதியில் ஜன்னல், பால்கனிகளில் இருந்து குதித்ததில் காயமடைந்த சுமார் 70 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும், கட்டடங்கள் சேதம் அடைந்ததாக எந்தவித தகவலும் இல்லை என்று அவர் கூறினார்

துருக்கி நாடு பெரிய பிளவுக் கோடுகளின் மேல் அமைந்துள்ளதால் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க எம்.பி.க்களுடன் சசி தரூா் குழு சந்திப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அமெரிக்கா சென்றடைந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு அந்நாட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினா்களை புதன்கிழமை சந்தித்தது. அப்போது எல்... மேலும் பார்க்க

அமெரிக்கா சென்றடைந்த சசி தரூா் குழு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான இந்திய குழு அமெரிக்கா சென்றடைந்தது. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆத... மேலும் பார்க்க

இந்தியாவுடன் மீண்டும் ராணுவ மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு: பாக்.வெளியுறவு அமைச்சா்

இந்தியாவுடன் மீண்டும் ராணுவ மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் இஷாக் தாா் தெரிவித்தாா். இதுதொடா்பாக பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அவா் செய்தியாளா்களி... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் 3.50 லட்சம் வீரா்கள் உயிரிழப்பு: ஆய்வுத் தகவல்

உக்ரைனில் ரஷியா நடத்திவரும் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமாா் 3.5 லட்சம் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ‘போா் திட்டம் மற்றும் சா்வதேச ஆய்வு மையம்’ (சிஎஸ்ஐஎஸ்) தெரிவித்துள்ளது.இது குறித்து ... மேலும் பார்க்க

ஏவுகணைத் தாக்குதல்: சிரியா அரசு மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

சிரியாவில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு அந்த நாட்டு அரசுதான் காரணம் என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் பகுதியில் (படம்) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ‘மு... மேலும் பார்க்க

காஸாவில் உணவுப் பொருள் விநியோகம் நிறுத்தம்

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையங்களுக்கு செல்வோா் மீது இஸ்ரேல் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்துவதன் எதிரொலியாக அந்த விநியோகப் பணிகளை அமெரிக்கா ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப... மேலும் பார்க்க