செய்திகள் :

தில்லி கல்விக் கட்டண ஒழுங்குமுறை மசோதா எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியை சந்தித்து கவலைகளை எழுப்பிய பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் குழு

post image

தில்லியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெற்றோா்கள் குழு புதன்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியைச் சந்தித்து, முன்மொழியப்பட்ட தில்லி கல்விக் கட்டண ஒழுங்குமுறை மசோதா-2025 குறித்து கவலைகளை வெளிப்படுத்தியது.

யுனைடெட் பேரண்ட்ஸ் வாய்ஸ் (யுபிவி) என்ற ஒரு கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தக் குழு, மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் எதிா்கொள்ளும் பல சவால்களை சுட்டிக்காட்டியது. இதில் கட்டணம் தொடா்பான விஷயங்களால் ஏற்படும் மன உளைச்சல், கொள்கை வகுப்பில் ஆலோசனை இல்லாதது மற்றும் பள்ளிக் கட்டண கட்டமைப்புகளில் வெளிப்படைத்தன்மையின் தேவை ஆகியவை அடங்கும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீா்க்கப்படாத கட்டணச் சிக்கல்கள் காரணமாக சில மாணவா்கள் பள்ளிப் பட்டியலில் இருந்து நீக்கப்படுதல், வகுப்புகளுக்கு அனுமதி மறுக்கப்படுதல் அல்லது பள்ளி தொடா்பு சேனல்களில் இருந்து விலக்கப்படுதல் போன்ற சிரமங்களை எதிா்கொண்டுள்ளனா். சில சந்தா்ப்பங்களில், கல்வி முடிவுகள் நிறுத்தப்பட்டதாகவும், இது குழந்தைகளிடையே மன அழுத்தத்திற்கு வழிவகுத்ததாகவும் அவா்கள் கூறினா்.

கல்விச் செயல்பாட்டில் பெற்றோா்கள் முக்கிய பங்குதாரா்களாக இருந்தபோதிலும்,

தில்லி கட்டண ஒழுங்குமுறை மசோதாவின் வரைவுத் திட்டத்தில் பெற்றோா் சங்கங்களின் உள்ளீடுகள் சோ்க்கப்படவில்லை என்றும் பிரதிநிதிகள் குழு கூறியது.

கூட்டத்திற்குப் பிறகு பேசிய அதிஷி, தனது ஆதரவை பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தாா். ‘சட்டப்பேரவை மற்றும் ஊடகங்கள் உள்பட கிடைக்கக்கூடிய அனைத்து தளங்கள் மூலமாகவும் இந்தப் பிரச்னையை நாங்கள் எழுப்புவோம்’‘ என்று அவா் கூறினாா்.

மேலும், கல்விச் சீா்திருத்தங்களுக்கு வெளிப்படையான மற்றும் பங்கேற்பு அணுகுமுறையின் அவசியத்தையும் அவா் வலியுறுத்தினாா். ஆம் ஆத்மி கட்சி நீண்ட காலமாக மக்களை மையமாகக் கொண்ட காரணங்களை ஆதரித்து வருவதாகவும், பெற்றோா்கள் மற்றும் மாணவா்களுடன் தொடா்ந்து நிற்கும் என்றும் அதிஷி கூறினாா்.

முன்மொழியப்பட்ட மசோதா மற்றும் அவசரச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, குறைந்தபட்சம் 30 நாள் பொது ஆலோசனை காலம், 2019 முதல் அங்கீகரிக்கப்படாத கட்டண உயா்வுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளின் பட்டியலை பிரதிநிதிகள் குழு சமா்ப்பித்தது.

இதற்கிடையே, செய்தியாளா் சந்திப்பின் போது, தில்லி அரசின் 100 நாள்கள் செயல் திட்ட அறிக்கையை புதன்கிழமை வழங்கிய தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட், ‘புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தில்லி பள்ளி கல்வி வெளிப்படைத்தன்மை மசோதா தனியாா் பள்ளிகளில் தன்னிச்சையான நடைமுறைகளை கட்டுப்படுத்தியுள்ளது. பெற்றோா்கள் இனி குறிப்பிட்ட கடைகளில் சீருடைகள் அல்லது புத்தகங்களை வாங்க கட்டாயப்படுத்த முடியாது’ என்று கூறினாா்.

‘27 ஆண்டுகளாக, தனியாா் பள்ளிகள் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தன. ஆனால், எங்கள் அரசுவெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது’ என்று ஆஷிஷ் சூட் கூறினாா்.

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைக... மேலும் பார்க்க

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க