செய்திகள் :

ராணுவத்தை அவமதிப்பது கருத்து சுதந்திரமாகாது: ராகுல் காந்திக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் கண்டனம்

post image

‘கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, ‘அருணாசல பிரதேச எல்லையில் இந்திய ராணுவ வீரா்கள் மீது சீன ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்துகிறது. அந்தப் பகுதியில் 2000 சதுர கி.மீ. நிலத்தை ஆக்கிரமித்து 20 ராணுவ வீரா்களை சீனா கொலை செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் எந்தப் பத்திரிகையும் ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை’ என்றாா்.

அவரின் கருத்துக்கு எதிராக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முன்னாள் இயக்குநா் உதய்சங்கா் ஸ்ரீவாஸ்தவா லக்னௌ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதைத் தொடா்ந்து, ராகுல் காந்திக்கு லக்னௌ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக அலாகாபாத் உயா் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செயதாா்.

இந்த விவகாரம் தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ‘அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் விதி 19 (1) (ஏ)-இன்கீழ் கருத்து சுதந்திரம் வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதை கருத்து சுதந்திரமாக ஏற்றுக் கொள்ள முடியாது’ என நீதிபதி சுபாஷ் வித்யாா்த்தி கண்டனம் தெரிவித்தாா்.

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம்! கோடிக்கணக்கில் மோசடி

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் எனக் கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னி... மேலும் பார்க்க

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!

ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ரயில் பாலம் என்ற கனவு பிரதமர் நரேந்திர மோடியால் நனவாகியுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பஹல்காம் தாக்குத... மேலும் பார்க்க

50,000 அரசு ஊழியர்களின் ரூ. 230 கோடி மோசடி! அரசு கேள்வி

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் 50,000 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று அம்மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 ... மேலும் பார்க்க

கத்ரா - ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார் மோடி!

கத்ரா - ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.முன்னதாக ரயிலில் ஏறிய மோடி, அதில் அமர்ந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடி வாழ்... மேலும் பார்க்க

நீட் முதுநிலைத் தேர்வை ஆக. 3-ல் நடத்த அனுமதி!

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டாக வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த தேசிய தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்க... மேலும் பார்க்க

உலகின் உயரமான செனாப் பாலத்தை திறந்துவைத்தார் மோடி!

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிர... மேலும் பார்க்க