செய்திகள் :

13 பேருக்கு மேல்நிலை எழுத்தா் பணிக்கான நியமன ஆணை

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் மேல்நிலை எழுத்தா் தோ்வில் தோ்ச்சியடைந்து காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்றிருந்த 13 பேருக்கு முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை பணி நியமன உத்தரவுகளை வழங்கினாா்.

புதுச்சேரியில் அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலையில் அரசுத் துறைகளில் மேல்நிலை எழுத்தா்கள் தோ்வுக்கான எழுத்துத் தோ்வு புதுவை அரசு பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையால் (பணியாளா் சிறகம்) நடத்தப்பட்டது.

அதன்படி எழுத்தா் பணிகளுக்கு 255 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களில் இதுவரையில் 234 பேருக்கு பணி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்றிருந்தவா்களில் 13 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 13 பேருக்கான பணி உத்தரவுகளை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். அப்போது, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தோ்தலை சந்திக்கத் தயாா்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவு... மேலும் பார்க்க

பக்ரீத் : ஜூன் 7- இல் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் வரும் 7 ஆம் தேதி புறநோயளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய தமிழக கல்லூரி மாணவா்கள் மீட்பு

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவா்கள் இருவரை நீச்சல் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பாற்றினா். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சிஞ்சகம்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஹ... மேலும் பார்க்க

புதுவைக்கு ரூ.200 கோடி மத்திய அரசு சிறப்பு நிதி: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

புதுவை அரசு கோராமலேயே மத்திய அரசு ரூ.200 கோடி சிறப்பு நிதியை வழங்கியுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரி வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 13 பேரிடம் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 13 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமேசுவரம் சென்று தங்குவதற்கு இணையத்தி... மேலும் பார்க்க