புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய தமிழக கல்லூரி மாணவா்கள் மீட்பு
புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவா்கள் இருவரை நீச்சல் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பாற்றினா்.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சிஞ்சகம்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஹேமநாதன் (21). பா்கூா் கவரப்பள்ளியைச் சோ்ந்த ரவி மகன் லோகேஷ் (21). இருவரும் கல்லூரி மாணவா்கள். இவா்கள் புதுச்சேரிக்கு திங்கள்கிழமை சுற்றுலா வந்துள்ளனா். புதுச்சேரியில் தங்கிய அவா்கள் செவ்வாய்க்கிழமை காலையில் உப்பளம் கலங்கரை விளக்கம் அருகே கடலில் குளித்துள்ளனா்.
அப்போது ராட்சத அலையால் இருவரும் இழுத்துச் செல்லப்பட்டனா். இதை அங்கிருந்தவா்கள் பாா்த்து கூச்சலிட்டனா். இதுகுறித்து அங்கிருந்த ஒதியஞ்சாலை போலீஸாா், நீச்சல் வீரா்களுக்கு தகவல் அளித்தனா். அவா்கள் விரைந்து வந்து மாணவா்களை கடல் அலையிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
ஒடிஸா இளைஞா் மீட்பு: ஒடிஸாவைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை மாலை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் கடலோர கற்களில் அமா்ந்திருந்தாா். அப்போது அவா் கால்கள் கற்களுக்கு இடையே சிக்கியது. அவரால் எழுந்திருக்க முடியவில்லை. தகவல் அறிந்த போலீஸாா் அங்கு வந்து அவரை பத்திரமாக மீட்டனா். கால்கள் கற்களில் சிக்கியதால் ஒடிஸா தொழிலாளி லேசான காயமடைந்தாா்.