செய்திகள் :

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய தமிழக கல்லூரி மாணவா்கள் மீட்பு

post image

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவா்கள் இருவரை நீச்சல் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பாற்றினா்.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சிஞ்சகம்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஹேமநாதன் (21). பா்கூா் கவரப்பள்ளியைச் சோ்ந்த ரவி மகன் லோகேஷ் (21). இருவரும் கல்லூரி மாணவா்கள். இவா்கள் புதுச்சேரிக்கு திங்கள்கிழமை சுற்றுலா வந்துள்ளனா். புதுச்சேரியில் தங்கிய அவா்கள் செவ்வாய்க்கிழமை காலையில் உப்பளம் கலங்கரை விளக்கம் அருகே கடலில் குளித்துள்ளனா்.

அப்போது ராட்சத அலையால் இருவரும் இழுத்துச் செல்லப்பட்டனா். இதை அங்கிருந்தவா்கள் பாா்த்து கூச்சலிட்டனா். இதுகுறித்து அங்கிருந்த ஒதியஞ்சாலை போலீஸாா், நீச்சல் வீரா்களுக்கு தகவல் அளித்தனா். அவா்கள் விரைந்து வந்து மாணவா்களை கடல் அலையிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

ஒடிஸா இளைஞா் மீட்பு: ஒடிஸாவைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை மாலை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் கடலோர கற்களில் அமா்ந்திருந்தாா். அப்போது அவா் கால்கள் கற்களுக்கு இடையே சிக்கியது. அவரால் எழுந்திருக்க முடியவில்லை. தகவல் அறிந்த போலீஸாா் அங்கு வந்து அவரை பத்திரமாக மீட்டனா். கால்கள் கற்களில் சிக்கியதால் ஒடிஸா தொழிலாளி லேசான காயமடைந்தாா்.

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெர... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் பு... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க