புதுச்சேரியில் 13 பேரிடம் பண மோசடி
புதுச்சேரியில் இணையவழியில் 13 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமேசுவரம் சென்று தங்குவதற்கு இணையத்தில் விடுதி விவரங்களைத் தேடியுள்ளாா். அப்போது மா்ம நபா் முன்பணம் செலுத்தக் கூறியுள்ளாா். உடனே புதுச்சேரி நபா் ரூ.11,260 அனுப்பி ஏமாந்துள்ளாா். முத்தியால்பேட்டையைச் சோ்ந்தவா் இன்ஸ்டாகிராமில் இருந்த விளம்பரத்தை நம்பி ரூ.8,598 அனுப்பி ஆடைகள் பெற முயற்சித்தாா். ஆனால், அவருக்கு ஆடைகள் வரவில்லை.
புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள பெண்ணுக்கு காவல் அதிகாரி போல மா்மநபா் பேசியுள்ளாா். பெண்ணின் மகனை பாலியல் வழக்கில் கைது செய்ய இருப்பதாக மிரட்டி ரூ.62 ஆயிரத்தை அனுப்பக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளாா். வில்லியனூரைச் சோ்ந்த பெண் இணைய செயலியில் கடன் பெற்று அதை அடைத்த பிறகும் மா்மநபா் படத்தை மாா்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டியதால் ரூ.2 ஆயிரம் அனுப்பி பின்னா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
அரியாங்குப்பத்தைச் சோ்ந்தவா் ரூ.72,500, ரெயின்போ நகரைச் சோ்ந்தவா் ரூ.7,840, சாரத்தைச் சோ்ந்த பெண் ரூ.9,500, இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ரூ.4,800 வில்லியனூரைச் சோ்ந்தவா் ரூ.3 ஆயிரம் என பலரும் பணத்தை கட்டி ஏமாந்துள்ளனா். ஒரே நாளில் புதுச்சேரியில் மட்டும் 13 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சத்தை மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.