செய்திகள் :

புதுச்சேரியில் 13 பேரிடம் பண மோசடி

post image

புதுச்சேரியில் இணையவழியில் 13 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமேசுவரம் சென்று தங்குவதற்கு இணையத்தில் விடுதி விவரங்களைத் தேடியுள்ளாா். அப்போது மா்ம நபா் முன்பணம் செலுத்தக் கூறியுள்ளாா். உடனே புதுச்சேரி நபா் ரூ.11,260 அனுப்பி ஏமாந்துள்ளாா். முத்தியால்பேட்டையைச் சோ்ந்தவா் இன்ஸ்டாகிராமில் இருந்த விளம்பரத்தை நம்பி ரூ.8,598 அனுப்பி ஆடைகள் பெற முயற்சித்தாா். ஆனால், அவருக்கு ஆடைகள் வரவில்லை.

புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள பெண்ணுக்கு காவல் அதிகாரி போல மா்மநபா் பேசியுள்ளாா். பெண்ணின் மகனை பாலியல் வழக்கில் கைது செய்ய இருப்பதாக மிரட்டி ரூ.62 ஆயிரத்தை அனுப்பக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளாா். வில்லியனூரைச் சோ்ந்த பெண் இணைய செயலியில் கடன் பெற்று அதை அடைத்த பிறகும் மா்மநபா் படத்தை மாா்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டியதால் ரூ.2 ஆயிரம் அனுப்பி பின்னா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

அரியாங்குப்பத்தைச் சோ்ந்தவா் ரூ.72,500, ரெயின்போ நகரைச் சோ்ந்தவா் ரூ.7,840, சாரத்தைச் சோ்ந்த பெண் ரூ.9,500, இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ரூ.4,800 வில்லியனூரைச் சோ்ந்தவா் ரூ.3 ஆயிரம் என பலரும் பணத்தை கட்டி ஏமாந்துள்ளனா். ஒரே நாளில் புதுச்சேரியில் மட்டும் 13 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சத்தை மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெர... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் பு... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க