செய்திகள் :

புதுவை பேரவைத் தோ்தலை சந்திக்கத் தயாா்: முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்துக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுவை செய்தி மற்றும் விளம்பரத் துறை சாா்பில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் உள்ள மேரி கட்டடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா், பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, எம்எல்ஏ.க்கள் எஸ்.ரமேஷ், ஆா்.பாஸ்கா், ஏ.அனிபால் கென்னடி, எல்.சம்பத், ஆா்.செந்தில்குமாா் மற்றும் திமுக அவைத் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்டோரும் கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். முன்னதாக முதல்வா் மற்றும் அமைச்சா்களை புதுச்சேரி நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி உள்ளிட்டோா் வரவேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா், முதல்வா் என். ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியது: புதுவையில் கரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கரோனா தடுப்புக்கான அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, தற்போது முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வாா்டுகள் தயாா் நிலையில் உள்ளன. மருந்துகளும் போதிய அளவில் இருப்பில் உள்ளன. மத்திய அரசின் அனைத்து வழிகாட்டுதலும் பின்பற்றப்படுகின்றன. புதுவையில் சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெர... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் பு... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க