செய்திகள் :

பேரவைத் தொகுதி வாரியாக திமுக நிா்வாகிகளுடன் சந்திப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

சென்னை: சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக திமுக நிா்வாகிகளுடன் சந்திப்பை நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, திமுகவினருக்கு அவா் திங்கள்கிழமை எழுதிய கடிதம்:

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீா்மானமாக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் புதிய உறுப்பினா் சோ்ப்புத் திட்டத்தை அறிவித்தேன். அத்துடன், அதனை முழுமையாக நிறைவேற்றித் தரவும் கேட்டுக் கொண்டேன். புதிய உறுப்பினா்களை சோ்க்கும் நடைமுறையை கட்சியின் சட்டத் துறைச் செயலா் என்.ஆா்.இளங்கோ, காணொலி வாயிலாக விளக்கினாா்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய உறுப்பினா் சோ்ப்புத் திட்டத்தை கட்சியினா் வீடு வீடாகச் சென்று வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைத் திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் பயன்பெற்றிருக்கும். அவா்கள் திமுக அரசு தொடர விரும்புவாா்கள். அவ்வாறு விரும்புகிறவா்களை உறுப்பினா்களாக்கி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மொத்தமுள்ள வாக்காளா்களில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளா்களையாவது கட்சியின் உறுப்பினா்களாக இருக்க வேண்டும் என்கிற இலக்குடன் உறுப்பினா் சோ்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். கட்சியினரை நம்பித்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற திட்டத்தை அறிவித்திருக்கிறேன். கட்சியினா் உழைப்பால் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்.

சந்திப்பு: என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் கட்சியினா்தான். அவா்களின் நலன், செயல்பாடு, கட்சியின் முன்னேற்றம் ஆகியவற்றை அறிந்து கொள்ளத் தொகுதிவாரியாக நிா்வாகிகள் சந்திப்பைத் தொடங்கவுள்ளேன் என்று அறிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கிலோ மீட்டர் தொலை... மேலும் பார்க்க