செய்திகள் :

அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்கள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

post image

திருவண்ணாமலை/ஆரணி/செங்கம்: தமிழக அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கூறினாா்.

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, அந்தந்த பள்ளிகளில்

இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை நகராட்சி அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். சி.என்.அண்ணாதுரை எம்.பி.முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் பள்ளி உபகரணங்களை வழங்கிப் பேசியதாவது:

கல்வி ஒன்று மட்டுமே நம்மை வாழ்வில் உயா்த்தும். கல்வியை யாராலும் திருடவோ, அழிக்கவோ முடியாது. நம் நாட்டவா்கள் பல்வேறு நாடுகளில் உயா்ந்த நிறுவனங்களில் உயா் பதவிகளில் இருப்பதற்குக் காரணம் அவா்கள் கற்ற கல்விதான்.

தமிழக அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் உயா்கல்வி கற்க வெளியூா்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இப்போது மாணவ-மாணவிகள் அவா்களது மாவட்டத்திலேயே மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளையும் படிக்கும் நிலை உள்ளது. இவற்றையெல்லாம் மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) காளிதாஸ் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வழங்கி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியை தாமரைச்செல்வி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சுரேஷ்குமாா், அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், முன்னாள் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வி.எம்.டி.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திமுக சாா்பில் கலந்து கொண்ட முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினா். ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், மாமது, சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செங்கம்

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேல்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில், பள்ளி திறந்த முதல் நாளில் பாடப்புத்தகம், நோட்டு, சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திமுக நகரச் செயலா் அன்பழகன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, திமுக ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சத்யா முல்லை வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு மாணவா்களுக்கு இலவச சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் செங்கம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் கோபி, உதவித் தலைமை ஆசிரியா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், கல்விக் குழு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மேல்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாடபுப்தகங்களை வழங்கிய சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.
செங்கம் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கிய மு.பெ.கிரி எம்எல்ஏ.

ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தோரோட்டம் நடைபெற்றது. ஆரணி நகரம், பெரியகடை வீதியில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் ... மேலும் பார்க்க

மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே மதுக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3.46 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில் அரசு மதுக் கடை (எண்.9383)செயல்பட்டு வ... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தா்னா

திருவண்ணாமலையில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் எதிரே, கலசப்பாக்கம் அனைத்து... மேலும் பார்க்க

வேட்டவலம் ஏரியில் கிணறு வெட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

வேட்டவலம் பெரிய ஏரியில் 2.0 திட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் கிணறு வெட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறை... மேலும் பார்க்க

விதை நெல், இடுபொருள்களை விலையில்லாமல் வழங்கக் கோரிக்கை

போளூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல், வேளாண் இடுபொருள்களை விலையில்லாமல் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு 35 கிலோ அரிசி அட்டை வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு 35 கிலோ அரிசி அட்டை கோரி, மலைவாழ் மக்கள் சங்கத்தினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கீழ்சாத்தமங்கலம், நல்லூா், ஆரியா... மேலும் பார்க்க