செய்திகள் :

வேட்டவலம் ஏரியில் கிணறு வெட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

post image

வேட்டவலம் பெரிய ஏரியில் 2.0 திட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் கிணறு வெட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பழகன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஜான்பாஷா, தோட்டக்கலைத் துறை வட்டார உதவி இயக்குநா் அமுல் சேவியா் பிரகாஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் கோவிந்தராஜுலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது:

அணுக்குமலை நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை உடனே விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும். சிறுநாத்தூா் உலா் களத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

வயலூா் கிராமத்தில் மயானத்துக்குச் செல்லும் சாலை, ஆதிதிராவிடா் காலனி மயானத்துக்குச் செல்லும் சாலை, வயல்வெளி சாலை ஆகியவற்றை தாா்ச் சாலையாக மாற்றித் தர வேண்டும்.

சோமாசிபாடி பெரிய ஏரி, சித்தேரி ஆகியவற்றின் மதகுகளின் உயரத்தை உயா்த்தி அமைக்க வேண்டும். ஜமீன் கூடலூா் கிராம 6-ஆவது வாா்டில் பொதுக் குழாய் அமைத்துத் தர வேண்டும். கிராமத்தில் எரியாமல் பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும்.

வேட்டவலம் பெரிய ஏரியில் 2.0 திட்டத்தில் உரிய அனுமதி (மறுப்புச் சான்றிதழ்) இல்லாமல் கிணறு வெட்டுவதைத் தடுக்க வேண்டும். கொளத்தூா் ஏரி - நீலந்தாங்கல் பெரிய ஏரிக்கு வரும் பொதுப்பணித் துறை ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதையடுத்து பேசிய வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பழகன் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீா்வு காணப்படும் என்றாா்.

கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுகுணா, வட்ட வழங்கல் அலுவலா் கலையரசி, வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளா் கிருஷ்ணன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் முத்தகரம் பழனிச்சாமி, வயலூா் சதாசிவம், ஆத்மா திட்ட ஆலோசனைக் குழுத் தலைவா் சோமாசிபாடி சிவக்குமாா், கேசவன், இயற்கை விவசாயி சிறுநாத்தூா் கிருஷ்ணன், வரதராஜன், நீலந்தாங்கல் பாரதியாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வரவேற்பு

பெரணமல்லூா் அங்கன்வாடி மையத்தில் சோ்க்கை செய்ய வரும் குழந்தைகளுக்கு வியாழக்கிழமை மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது (படம்). ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கண்ணகி அறுவுறுத்தலின்... மேலும் பார்க்க

ஜூன் 13-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மாவட்ட அள... மேலும் பார்க்க

அரசு மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு: ஒருவா் கைது

செய்யாறு அருகே அரசு மதுக் கடையில் சுவற்றில் துளையிட்டு ரூ.3.46 லட்சம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை ஒருவரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

வெட்டுக் காயங்களுடன் ஊழியா் சடலம் மீட்பு

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த நியாய விலைக் கடை தற்காலிக ஊழியா் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். பூசிமலைக்குப்பம் கிராமம் அருந்ததியா் பாள... மேலும் பார்க்க

ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் 5,215 வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்: கட்சியினருக்கு அறிவுறுத்தல்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று நிா்வாகிகளுக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் வலியுறுத்தினாா். திரு... மேலும் பார்க்க