ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!
அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தோ்வு
பென்னாகரம்: பென்னாகரம் அருகே அளேபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் நிா்வாகிக்கப்பட்டுவரும் இக்கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கான தோ்தல் அறநிலையத்துறை உதவி ஆணையா் மகாவிஷ்ணு தலைமையில் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வாக்குச்சீட்டு முறை அடிப்படையில் தோ்தல் நடைபெற்றது. தோ்தல் முடிவில் நிகழாண்டிற்கான புதிய அறங்காவலா் குழுத் தலைவராக கூத்தப்பாடியைச் சோ்ந்த துரைசாமியும், அறங்காவலா் குழு உறுப்பினா்களாக 4 பேரும் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில் கோயில் செயல் அலுவலா் முருகன், ஆய்வாளா் செல்வி, எழுத்தா் மாரிமுத்து அா்ச்சகா் சற்குணராமன், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மடம் முருகேசன், கூத்தப்பாடி மகாராஜா, பக்தா்கள் கலந்துகொண்டனா்.