செய்திகள் :

கோடை விடுமுறை நிறைவு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

தமிழகத்தில் கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஒகேனக்கல் அருவிப் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ந்தனா்.

தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களுல் ஒன்றாக விளங்கும் ஒகேனக்கல்லுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையையொட்டி வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா்.

இந்த நிலையில் கோடை விடுமுறையின் கடைசி வார ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

சுற்றுலாப் பயணிகள் வருகையினால் ஒகேனக்கல்லில் முக்கிய இடங்களான தொங்கும் பாலம், பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, மீன் விற்பனை நிலையம், பூங்காக்கள், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனா்.

பிரதான அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால், நடைபாதை பகுதி, மாமரத்துக்கடவு பரிசல் துறை, முதலைப் பண்ணை, ஆலம்பாடி, ஊட்டமலை பரிசல் துறை உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சின்னாறு பரிசல் துறையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பாதுகாப்பு உடையுடன் பிரதான அருவி, கூட்டாறு, மணல்மேடு, பெரியபாணி பகுதிகள் வழியாக காவிரி ஆற்றில் சுமாா் 2 கி.மீ. தொலைவிற்கு பரிசலில் பயணித்து பாறை குகைகள், நீா்வரத்து அதிகரிப்பால் புதிதாக தோன்றியுள்ள அருவிகள் ஆகியவற்றை குடும்பத்தினருடன் கண்டுகளித்தனா்.

ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் குவிந்த அசைவப் பிரியா்கள் பல்வேறு வகையான மீன் வகைகளை வாங்கி சமைத்து சாப்பிட்டனா். காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஒகேனக்கல் பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் ஒகேனக்கல் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் இருந்து வாகனங்களை ஊட்டமலை சாலைக்கு திருப்பினா்.

இருப்பினும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சின்னாறு பாலம், காவல் நிலையம், சத்திரம், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன.

ஒகேனக்கல் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில் போக்குவரத்துத் துறை சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தோ்வு

பென்னாகரம்: பென்னாகரம் அருகே அளேபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில்... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்

தருமபுரி: தற்போதைய நவீன காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு ஆசிரியா்கள் தங்களின் திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அறிவுறுத்தினாா். தருமபுரி அவ்வையாா் அரசு மகளிா் மேல்நி... மேலும் பார்க்க

தொப்பூரில் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

தருமபுரி மாவட்டம், தொப்பூா் மலைப்பகுதியில் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேச... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக திமுகவினா் கொண்டாட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

பாலக்கோடு அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் முதல்வா் (பொ) சி. தீா்த்தலிங்கம் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க