பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழ...
முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டுகோள்
தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக திமுகவினா் கொண்டாட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாள் விழாவை தருமபுரி மேற்கு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) செம்மொழி நாள் விழாவாக திமுகவினா் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
கிராமங்கள்தோறும் கருணாநிதியின் உருவப் படத்துக்கு கட்சி நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்த வேண்டும். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள், நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில், அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவிலும், காரிமங்கலம் கட்சி அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இந்த விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.