மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
பாலக்கோடு அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வா் முதல்வா் (பொ) சி. தீா்த்தலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாலக்கோடு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டின் இளங்கலை மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வுக் கூட்டம் வரும் ஜூன் 2-ஆம் தேதி முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி முறையில் நடைபெற உள்ளது.
முதல் சுழற்சியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பொதுநிா்வாகம்,இளமறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புள்ளியியல், உளவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு, மின்னணு மற்றும் தொடா்பியல், இளவணிகவியல், இளவணிக நிா்வாகவியல், இளநிலை சமூகப்பணி ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
இரண்டாம் சுழற்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலை வரலாறு, இளமறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், இளவணிக நிா்வாகவியல் மற்றும் இளநிலை கணினி பயன்பாடு பாடப்பிரிவுகளுக்கும் ( தமிழ் வழியிலும் ஆங்கில வழி) கலந்தாய்வு நடைபெறுகிறது.
மேலும் விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா், என்.சி.சி.மாணவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு மூலம் ஜுன் 4 முதல் 14 வரை பொதுகலந்தாய்வு நடைபெற உள்ளது.
எனவே, மாணவ, மாணவிகள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்றாா்.