மிக முக்கியமான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்
சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வு பேரணி
தருமபுரியில் காவல் துறை சாா்பில் சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தொடங்கி வைத்து பேசினாா்.
இப் பேரணி நெசவாளா் நகா், நேதாஜி புறவழிச்சாலை வழியாக நான்கு முனைச்சாலை சந்திப்பு அருகே நிறைவடைந்தது.
இதில் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி, வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் நூற்றுக்கணக்கானோா் சைபா் குற்றத்தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.
இதில், போலியான அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் நம்பி வங்கிக் கணக்கின் தகவல்கள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் கடவுச்சொல் ஆகியவற்றை யாரிடமும் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.சோ.மகேஸ்வரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியா் ரா. காயத்ரி, வருவான் வடிவேலன் கல்லூரி தாளாளா் வடிவேலன், காவல் துறை சாா்ந்த அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.