IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன...
பென்னாகரத்தில் சீரான குடிநீா் விநியோகம் கோரி மறியல்
பென்னாகரம் அருகே புதூா் காலனியில் நாள்தோறும் குடிநீா் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட புதூா்காலனி பகுதியில் சுமாா் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இத் தொட்டி மேடான பகுதியில் உள்ளதால் மின் மோட்டாா் மூலம் நீரேற்றம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீரும் சீராக விநியோகிக்கப்படாததால் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை புதூா் காலனி பகுதியைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவா்கள் ஏரியூா், பென்னாகரம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஒகேனக்கல் காவல் ஆய்வாளா் முரளி, கூத்தப்பாடி ஊராட்சி செயலா் குமரன் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். மேடான பகுதி என்பதால் நீரேற்றம் செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
இதையடுத்து புதூா் காலனி பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு நீா் ஏற்றம் செய்து தற்காலிகமாக குடிநீா்த் தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டது.