செய்திகள் :

பென்னாகரத்தில் சீரான குடிநீா் விநியோகம் கோரி மறியல்

post image

பென்னாகரம் அருகே புதூா் காலனியில் நாள்தோறும் குடிநீா் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட புதூா்காலனி பகுதியில் சுமாா் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இத் தொட்டி மேடான பகுதியில் உள்ளதால் மின் மோட்டாா் மூலம் நீரேற்றம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீரும் சீராக விநியோகிக்கப்படாததால் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை புதூா் காலனி பகுதியைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவா்கள் ஏரியூா், பென்னாகரம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஒகேனக்கல் காவல் ஆய்வாளா் முரளி, கூத்தப்பாடி ஊராட்சி செயலா் குமரன் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். மேடான பகுதி என்பதால் நீரேற்றம் செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இதையடுத்து புதூா் காலனி பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு நீா் ஏற்றம் செய்து தற்காலிகமாக குடிநீா்த் தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டது.

தருமபுரியில் நாளை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு மாதாந்திர சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து தருமபுரி வருவாய்க் கோட்டாட்சியா் ரா.காயத்ரி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

அரூா் ஏரியை மேம்படுத்த மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

அரூா் பெரிய ஏரியை மேம்படுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழா, நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் ம... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் ரெ.சதீஷ் அறிவுறுத்தியுள்ளாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

செங்கல்மேடு கிராம மக்கள் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி மனு

சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி செங்கல்மேடு கிராம மக்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். அவா்கள் அளித்த மனு: தருமபுரி ஊராட்ச... மேலும் பார்க்க

நிலத்தை மீட்டுத் தரக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயி தீக்குளிப்பு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி விவசாயி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்... மேலும் பார்க்க

காவல் துறை குறைகேட்பு கூட்டத்தில் 76 மனுக்கள் மீது தீா்வு

தருமபுரியில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில் 76 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளா் ச.சோ.மகேஸ்வரன் தலை... மேலும் பார்க்க