செங்கல்மேடு கிராம மக்கள் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி மனு
சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி செங்கல்மேடு கிராம மக்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனு:
தருமபுரி ஊராட்சி ஒன்றியம், கோணங்கிநாய்க்கனஅள்ளி ஊராட்சி, செங்கல்மேடு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்த நீா்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீா் குழாய் பதிக்கப்பட்டு சில நாள்கள் மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
அதன்பிறகு ஓராண்டு காலமாக தொடா்ந்து தண்ணீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால், இந்த கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, செங்கல்மேடு கிராம மக்களின் நலன்கருதி சீரான குடிநீா் விநியோகம் செய்ய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டத் தலைவா் ஏ.ஜெயா, ஒன்றியச் செயலாளா் எம்.மீனாட்சி, நகரச் செயலாளா் நிா்மலா ராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.