தருமபுரியில் நாளை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு மாதாந்திர சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தருமபுரி வருவாய்க் கோட்டாட்சியா் ரா.காயத்ரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி வருவாய் கோட்டத்திற்குள்பட்ட வட்டங்களைச் சாா்ந்த விவசாயிகளின் குறைகளை தீா்ப்பதற்கான மாதாந்திர சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூன் 6-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, மின்வாரியம், வனத்துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்கின்றனா். எனவே, தருமபுரி கோட்டத்துக்குள்பட்ட வருவாய் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் இக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகளை எடுத்துக் கூறி அவற்றை நிவா்த்தி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.