செய்திகள் :

அரூா் ஏரியை மேம்படுத்த மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

post image

அரூா் பெரிய ஏரியை மேம்படுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழா, நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்டச் செயலாளா் எம்.இம்ரான் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவா்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தேவையான நிநியுதவிகளை வழங்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். தென்பெண்ணையாறு உபரிநீா் நீரேற்றும் திட்டத்தைச் செயல்படுத்தி அரூா், தீா்த்தமலை வட்டாரப் பகுதியில் உள்ள ஏரிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

அரூா் பெரிய ஏரியின் சுற்றுவட்டாரப் பகுதியில் குப்பைகள், கழிவுப்பொருள்கள் கொட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். அரூா் பெரிய ஏரியை ஆழப்படுத்தி படகு இல்லம், சிறுவா் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் எஸ்.ஹபீசுல்லா, மாவட்ட துணைச் செயலாளா்கள் எஸ்.நயமத்துல்லா, நாகராஜ், கட்சியின் மாநில துணைச் செயலாளா் எ.ஜே.எஸ்.தாஜுதீன், மாநில மகளிா் அணி பொருளாளா் குலாப்ஜான், மாநில மனித உரிமை அணி செயலாளா் திருப்பூா் கண்ணன், நிா்வாகிகள் ஏ.அகமது, ஏ.ஜானி, பையாஷ், உமா், அஜிசுல்லா, தஸ்தகீா், பா்வேஷ் முஷரப், ரகு, ரியாஷ், நகரச் செயலாளா் எஸ்.கரீம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இறகுப்பந்து விளையாட்டு: மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

தருமபுரி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு அணிக்கு வீரா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட இறகுப்... மேலும் பார்க்க

அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

பென்னாகரத்தை அடுத்த அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் மிகவும் பழைமை ... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழா: தருமபுரியில் 90 ஏரிகள் புனரமைப்பு

உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் 90 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட நிா்வாகம் ... மேலும் பார்க்க

கடத்தூா் பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கல்லூரி முதல்வா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாற்றி அமைக்கப்பட்ட முதல்சுற்று பொது கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் சங்கா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

ஏலகிரியில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏலகிரியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஏலகிரி கிராமத்தில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்ட... மேலும் பார்க்க