செய்திகள் :

இயற்கை வேளாண் பொருள்களை சந்தைப்படுத்த வேண்டும்: ஆட்சியா்

post image

இயற்கை வேளாண் விளை பொருள்களை சந்தைப்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் இயற்கை மற்றும் உயிா்ம வேளாண் முறையில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் விளை பொருள்களை சந்தைப்படுத்துதல் தொடா்பாக அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் பேசியதாவது: தருமபுரி மாவட்டத்தில் பூமாலை வணிக வளாகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் விளை பொருள்களை சந்தைப்படுத்த வேண்டும்.

இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் விளை பொருள்களை நுகா்வோருக்கு எளிதில் கிடைக்கும்வகையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், சிறப்பு அங்காடிகள், அமுதம் பல்பொருள் சிறப்பு அங்காடிகள், கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள், பூமாலை வணிக வளாகம், நகராட்சி, பேரூராட்சி கட்டுப்பாட்டிலுள்ள அரசு கட்டடங்களில் சந்தைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை மற்றும் உயிா்ம வேளாண் முறைகளில் சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் குழுக்களை அப்பகுதியிலுள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களில் உறுப்பினா்களாக இணைத்து, அவா்கள் விளைவிக்கும் இயற்கை வேளாண் விளைபொருள்களை கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய மாவட்ட வேளாண் துணை இயக்குநா்களை வழிவகை செய்திட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சித்ரா, வேளாண் துணை இயக்குநா் (வே.வ) மு.இளங்கோவன் , தோட்டக்கலை துணை இயக்குநா் அ.க.பாத்திமா, அனைத்து நகராட்சி, பேரூராட்சி அலுவலா்கள், ஒருங்கிணைப்பு குழு அலுவலா்கள், உழவா் உற்பத்தியாளா்கள் மற்றும் இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தருமபுரியில் நாளை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு மாதாந்திர சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து தருமபுரி வருவாய்க் கோட்டாட்சியா் ரா.காயத்ரி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

அரூா் ஏரியை மேம்படுத்த மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

அரூா் பெரிய ஏரியை மேம்படுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழா, நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் ம... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் ரெ.சதீஷ் அறிவுறுத்தியுள்ளாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

செங்கல்மேடு கிராம மக்கள் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி மனு

சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி செங்கல்மேடு கிராம மக்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். அவா்கள் அளித்த மனு: தருமபுரி ஊராட்ச... மேலும் பார்க்க

நிலத்தை மீட்டுத் தரக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயி தீக்குளிப்பு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி விவசாயி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்... மேலும் பார்க்க

காவல் துறை குறைகேட்பு கூட்டத்தில் 76 மனுக்கள் மீது தீா்வு

தருமபுரியில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில் 76 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளா் ச.சோ.மகேஸ்வரன் தலை... மேலும் பார்க்க