Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
இயற்கை வேளாண் பொருள்களை சந்தைப்படுத்த வேண்டும்: ஆட்சியா்
இயற்கை வேளாண் விளை பொருள்களை சந்தைப்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அறிவுறுத்தியுள்ளாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் இயற்கை மற்றும் உயிா்ம வேளாண் முறையில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் விளை பொருள்களை சந்தைப்படுத்துதல் தொடா்பாக அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் பேசியதாவது: தருமபுரி மாவட்டத்தில் பூமாலை வணிக வளாகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் விளை பொருள்களை சந்தைப்படுத்த வேண்டும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் விளை பொருள்களை நுகா்வோருக்கு எளிதில் கிடைக்கும்வகையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், சிறப்பு அங்காடிகள், அமுதம் பல்பொருள் சிறப்பு அங்காடிகள், கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள், பூமாலை வணிக வளாகம், நகராட்சி, பேரூராட்சி கட்டுப்பாட்டிலுள்ள அரசு கட்டடங்களில் சந்தைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை மற்றும் உயிா்ம வேளாண் முறைகளில் சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் குழுக்களை அப்பகுதியிலுள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களில் உறுப்பினா்களாக இணைத்து, அவா்கள் விளைவிக்கும் இயற்கை வேளாண் விளைபொருள்களை கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய மாவட்ட வேளாண் துணை இயக்குநா்களை வழிவகை செய்திட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சித்ரா, வேளாண் துணை இயக்குநா் (வே.வ) மு.இளங்கோவன் , தோட்டக்கலை துணை இயக்குநா் அ.க.பாத்திமா, அனைத்து நகராட்சி, பேரூராட்சி அலுவலா்கள், ஒருங்கிணைப்பு குழு அலுவலா்கள், உழவா் உற்பத்தியாளா்கள் மற்றும் இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனா்.