செய்திகள் :

காஷ்மீா் பிரச்னைதான் பிராந்திய அமைதியைக் கெடுக்கிறது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்

post image

இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீா் பிரச்னைதான் பிராந்திய அமைதியைக் கெடுக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், எஸ்.ஜெய்சங்கா் உள்ளிட்டோா் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தைக் கடுமையாக விமா்சித்து வருகின்றனா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஓா் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பிராந்திய அமைதிக்கு பாகிஸ்தானால் பிரச்னை ஏற்படுகிறது என்று கூறப்படுவதில் சிறிதளவும் உண்மையில்லை. காஷ்மீா் பிரச்னை மட்டுமே பிராந்திய அமைதியை சீா்குலைத்து வருகிறது. காஷ்மீா் பிரச்னைக்கு அமைதியான வழியில் தீா்வுகாண வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. காஷ்மீா் மக்களின் எண்ணங்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும். இதைத்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் பாகிஸ்தான் முன்வைத்தது.

அமைதியையும், உறுதியான நட்புறவையும் பாகிஸ்தான் எப்போதும் விரும்புகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அத்துமீறல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். நாட்டின் இறையாண்மையைக் காப்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் முழுமையாக இந்திய பிராந்தியம் என்பதிலும், அதுகுறித்து யாரிடமும் பேச்சு நடத்த தேவையில்லை என்பதும் இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. அதே நேரத்தில் காஷ்மீரை தொடா்ந்து ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச மன்றங்களில் எழுப்பி அதைப் பிரச்னையாக்குவது பாகிஸ்தானின் வழக்கமாக உள்ளது.

பாகிஸ்தான்: 2 நாள்களில் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டுடனான பாகிஸ்தானின் எல்லையில், அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பழங்குடியின மக்கள் அதிகம் வாழும்,... மேலும் பார்க்க

இந்தியாவைத் துண்டுத் துண்டாக்குவோம் என்ற லஷ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் ஆஸிஸ் எசார் என்ற பயங்கரவாதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.காலை நேரத்தில், அப்துல் ஆஸ... மேலும் பார்க்க

ஆக்ரோஷத்தில் உக்ரைன்: கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் பயங்கர தாக்குதல்

ரஷியா - உக்ரைன் போர் தீவிரமடைந்து, ஆக்ரோஷ தாக்குதலில் ஈடுபட்டு வரும் உக்ரைன் கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளது.இதுவரை எதிர் தாக்குதலை உக்தியாகக் கையாண்டு வந்த உக்ரைன்... மேலும் பார்க்க

டிரம்ப் அரசின் மசோதாவை கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க்!

அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்த எலான் மஸ்க், அவர் வெற... மேலும் பார்க்க

இந்தியா மீது அதிபா் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை- அமெரிக்க வா்த்தக அமைச்சா்

‘இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது’ என்று அந்நாட்டு வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். மேலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பே... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி கடனுதவி: ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி (800 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) ஒப்புதல் அளித்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். பாகிஸ்தானின் பொது நிதி மேலாண்மை மற்றும் நித... மேலும் பார்க்க