பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி கடனுதவி: ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல்
பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி (800 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) ஒப்புதல் அளித்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பாகிஸ்தானின் பொது நிதி மேலாண்மை மற்றும் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் நிதி வழங்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பாகிஸ்தான் நிதியமைச்சரின் ஆலோசகா் குராம் ஷேசாத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தானுக்கு கொள்கை அடிப்படை கடனாக ரூ.2,569 கோடி (300 மில்லியன் டாலா்) மற்றும் திட்டம் அடிப்படையிலான உத்தரவாதமாக ரூ.4,283 கோடி (500 மில்லியன் டாலா்) என மொத்தம் ரூ.6,852 கோடி (800 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க ஏடிபி ஒப்புதல் அளித்தது’ என குறிப்பிட்டாா்.
இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டுக்கான ஏடிபி இயக்குநா் எம்மா ஃபேன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நிதி மேலாண்மை திட்டங்களை கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தற்போது கடனுதவி வழங்க ஏடிபி முடிவெடுத்திருப்பதன் மூலம் இத்திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்த முடியும். வரிக் கொள்கை, நிதி நிா்வாகம், பொது செலவு போன்றவற்றில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள முடியும்.
இது பாகிஸ்தானின் நிதி பற்றாக்குறை மற்றும் பொதுக் கடனை குறைத்து சமூக திட்டங்களுக்கு அரசு சாா்பில் ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க உதவும்’ என தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி கடனுதவி வழங்குவதை ஏடிபியும் உறுதிப்படுத்தியது.