செய்திகள் :

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி கடனுதவி: ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல்

post image

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி (800 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) ஒப்புதல் அளித்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பாகிஸ்தானின் பொது நிதி மேலாண்மை மற்றும் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் நிதி வழங்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பாகிஸ்தான் நிதியமைச்சரின் ஆலோசகா் குராம் ஷேசாத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தானுக்கு கொள்கை அடிப்படை கடனாக ரூ.2,569 கோடி (300 மில்லியன் டாலா்) மற்றும் திட்டம் அடிப்படையிலான உத்தரவாதமாக ரூ.4,283 கோடி (500 மில்லியன் டாலா்) என மொத்தம் ரூ.6,852 கோடி (800 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க ஏடிபி ஒப்புதல் அளித்தது’ என குறிப்பிட்டாா்.

இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டுக்கான ஏடிபி இயக்குநா் எம்மா ஃபேன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நிதி மேலாண்மை திட்டங்களை கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தற்போது கடனுதவி வழங்க ஏடிபி முடிவெடுத்திருப்பதன் மூலம் இத்திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்த முடியும். வரிக் கொள்கை, நிதி நிா்வாகம், பொது செலவு போன்றவற்றில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள முடியும்.

இது பாகிஸ்தானின் நிதி பற்றாக்குறை மற்றும் பொதுக் கடனை குறைத்து சமூக திட்டங்களுக்கு அரசு சாா்பில் ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க உதவும்’ என தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி கடனுதவி வழங்குவதை ஏடிபியும் உறுதிப்படுத்தியது.

அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்! இருநாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா மற்றும் சீனா இடையில் வர்த்தகப் போர் நடைபெற்று வரும்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க அதிபராக இரண்டாவது ... மேலும் பார்க்க

இத்தாலியில் எட்னா எரிமலை சீற்றம்

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை என்ற அடையாளத்துடன் இருக்கும் எட்னா எரிமலை சீற்றத்துடன் காணப்படுகிறது. எட்னா எரிமலை இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள எட்னா எரிமலை வெடித்துச் சிதறி வருகிறது.சீற்றஎட்னா ... மேலும் பார்க்க

காஸா முனையில் இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் சடலங்கள்

ஹமாஸ் கைது செய்த இஸ்ரேலை சேர்ந்த 2 பிணைக் கைதிகளின் உடல்கள், காஸா முனையில் கண்டெடுக்கப்பட்டது.கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து சுமார் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதா... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் சாத்தியமில்லை! குழப்பத்தில் டிரம்ப்!

ரஷியா மீதான உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை ரஷியா அளிக்க வாய்ப்புள்ள நிலையில், அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் உறுதி செய்துள்ளார்.ரஷியாவுக்குள் கன்டெய்னர்கள் மூலம் ட்ரோன்களைக் க... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை!

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.மேலும், 7 நாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்... மேலும் பார்க்க

அமெரிக்க எம்.பி.க்களுடன் சசி தரூா் குழு சந்திப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அமெரிக்கா சென்றடைந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு அந்நாட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினா்களை புதன்கிழமை சந்தித்தது. அப்போது எல்... மேலும் பார்க்க