செய்திகள் :

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் சாத்தியமில்லை! குழப்பத்தில் டிரம்ப்!

post image

ரஷியா மீதான உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை ரஷியா அளிக்க வாய்ப்புள்ள நிலையில், அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் உறுதி செய்துள்ளார்.

ரஷியாவுக்குள் கன்டெய்னர்கள் மூலம் ட்ரோன்களைக் கொண்டு சென்ற உக்ரைன், கடந்த ஞாயிற்றுக்கிழமையில் பல்லாயிரக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு ட்ரோன் தாக்குதலை நடத்தியது. சிறிய ரக ட்ரோன்கள் என்றாலும், ஒரே நேரத்தில் ஏராளமான ட்ரோன்கள் மூலம், விமானத் தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

விமானங்களை அழிக்கும் அளவுக்கு திறன் இல்லாவிட்டாலும், தற்கொலை ட்ரோன்கள் என்பதால், விமானங்கள் மீது வெடித்துச் சிதறி, விமானத்தையும் தீப்பற்ற வைத்து அழித்து விட்டன. உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதலில், ரஷியாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்த ரஷியாவின் விமானங்களும் அழிக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில், இந்த இரு நாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், போர் நிலைமை குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் தொலைபேசி வாயிலாக விவாதித்தார்.

இதுகுறித்து, டிரம்ப் பேசுகையில், புதினுடன் சுமார் 75 நிமிடங்கள் பேசினேன். உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். உக்ரைனின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவிருப்பதாக புதின் கூறினார்.

இதன்மூலம், தற்போதைக்கு இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட சாத்தியமில்லை என்று தெரிகிறது என்று தெரிவித்தார்.

மேலும், இந்த தொலைபேசி உரையாடலில், இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்தும் இருவரும் விவாதித்ததாக ரஷிய அதிகாரி தெரிவித்தார்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரை டிரம்ப்தான் நிறுத்தினார்: புதினின் உதவியாளர்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சுவார்தையினால் நிறுத்தப்பட்டதாக ரஷிய அதிபர் புதினின் உதவியாளர் யுரி உஷாகோவ் தெரிவித்துள்ளார். ரஷியா - உக்ரைன் மோதல் குறித்து... மேலும் பார்க்க

புதிய கட்சித் தொடங்கும் எலான் மஸ்க்? 81% பேர் ஆதரவு!

அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க் புதிய கட்சித் தொடங்குவது தொடர்பாகத், தனது எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்... மேலும் பார்க்க

டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடந்து வரும் மோதலுக்கு இடையே, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டிரம்பை பதவி நீக்கம் செய்து, துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸை அதிபராக்க வேண்டும் என்று வலியுறுத்த... மேலும் பார்க்க

பார்லே ஜி - இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்கும் கொடுமை!

காஸாவில் உணவுப் பொருள்களின் அசல் விலையைவிட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது.இஸ்ரேல் - ஹமாஸ் போரையடுத்து, காஸாவினுள் செல்லும் நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்தப் போக்கை உலக ... மேலும் பார்க்க

பொதுவெளியில் வெடிக்கும் எலான் மஸ்க் - டிரம்ப் கருத்து மோதல்!

அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவராக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், கருத்து வேறுபாடு காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய நிலையில், இருவருக்கும... மேலும் பார்க்க