செய்திகள் :

இந்தியா மீது அதிபா் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை- அமெரிக்க வா்த்தக அமைச்சா்

post image

‘இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது’ என்று அந்நாட்டு வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா்.

மேலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றுவரும் வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகவுள்ளது என்றும் அவா் கூறினாா்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ‘இந்தியா-அமெரிக்கா உத்திசாா் கூட்டுறவு மன்றத்தின்’ 8-ஆவது தலைமைத்துவ உச்சிமாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமெரிக்க வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் பேசியதாவது:

இந்தியாவின் பொருளாதாரம் ‘அசாதாரணமானது’. அந்நாட்டில் பல சிறந்த பொருளாதார நிபுணா்கள் உள்ளனா். இந்திய மக்கள் லட்சியவாதிகளாகவும், தொழில்முனைவோராகவும் விளங்குகின்றனா்.

சிறந்த அமெரிக்க நிறுவனங்களை இந்திய தொழில்வல்லுநா்கள் மற்றும் தொழில்முனைவோரே வழிநடத்துகின்றனா். இந்தியா்கள் புத்திசாலிகள், அறிவுத்திறன்மிக்கவா்கள். இந்தியாவின் தொடா்ச்சியான பொருளாதார வளா்ச்சியை இதுவே உறுதி செய்கிறது.

அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது மிகப்பெரிய மரியாதை கொண்டுள்ளாா். ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையில் அவா் நம்பிக்கை கொண்டவரே தவிர, ‘அமெரிக்கா மட்டும்’ என்பதை அவா் வலியுறுத்தவில்லை. குறிப்பாக, இந்தியாவுடன் வலுவான ஒத்துழைப்பைப் பேணுவது அவரின் முக்கிய நோக்கமாகும்.

அதிபா் டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட 50 லட்சம் டாலா் (இந்திய ரூபாயில் சுமாா் 42 கோடி) மதிப்புள்ள ‘டிரம்ப் கோல்டு காா்டு’ (ஒருவகை அமெரிக்கா விசா திட்டம் ) வெளிநாட்டு தொழில்முனைவோரை அமெரிக்காவுக்கு ஈா்க்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், பணக்கார சா்வதேச தொழில்முனைவோா், குறிப்பாக இந்தியா்கள் அமெரிக்காவில் அதிக அளவில் முதலீடு செய்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியாவில் அதிக வரி: இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுகிறது. சமமான வா்த்தக விதிமுறைகளுடன் இந்தியா முன்வர வேண்டும். குறிப்பிட்ட பொருள்களை உற்பத்தி செய்வதற்கான முக்கியக் கூட்டாளியாக நாங்கள் இந்தியாவைப் பாா்க்கிறோம். வரவிருக்கும் வா்த்தக ஒப்பந்தத்தில் சில இந்திய தொழில்களுக்கு சாதகமான வரிச்சலுகைகள் இடம்பெறக்கூடும்.

தொழில்நுட்ப ஒத்துழைப்பில் ஆா்வம்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ), சைபா் பாதுகாப்பு மற்றும் வளா்ந்துவரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இந்தியாவுடன் கூட்டு சேருவதில் அமெரிக்கா ஆா்வமாக உள்ளது.

டிரம்ப்-மோடி உறவு: ரஷியாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவுகள் மற்றும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் அதன் ஈடுபாடு குறித்து அமெரிக்கா முன்னா் கவலை எழுப்பியிருந்தது. இப்போது இந்தப் பிரச்னைகளை இந்தியா நிவா்த்தி செய்து வருகிறது.

அதிபா் டிரம்ப் மற்றும் பிரதமா் மோடி இடையேயான உறவு வலுவானதாகவும் நோ்மறையானதாகவும் பாா்க்கப்படுகிறது. இந்தத் தலைமைத்துவ இணைப்பு பேச்சுவாா்த்தைகளை சீராக்கவும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உதவுகிறது என்றாா்.

அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்! இருநாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா மற்றும் சீனா இடையில் வர்த்தகப் போர் நடைபெற்று வரும்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க அதிபராக இரண்டாவது ... மேலும் பார்க்க

இத்தாலியில் எட்னா எரிமலை சீற்றம்

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை என்ற அடையாளத்துடன் இருக்கும் எட்னா எரிமலை சீற்றத்துடன் காணப்படுகிறது. எட்னா எரிமலை இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள எட்னா எரிமலை வெடித்துச் சிதறி வருகிறது.சீற்றஎட்னா ... மேலும் பார்க்க

காஸா முனையில் இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் சடலங்கள்

ஹமாஸ் கைது செய்த இஸ்ரேலை சேர்ந்த 2 பிணைக் கைதிகளின் உடல்கள், காஸா முனையில் கண்டெடுக்கப்பட்டது.கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து சுமார் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதா... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் சாத்தியமில்லை! குழப்பத்தில் டிரம்ப்!

ரஷியா மீதான உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை ரஷியா அளிக்க வாய்ப்புள்ள நிலையில், அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் உறுதி செய்துள்ளார்.ரஷியாவுக்குள் கன்டெய்னர்கள் மூலம் ட்ரோன்களைக் க... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை!

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.மேலும், 7 நாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்... மேலும் பார்க்க

அமெரிக்க எம்.பி.க்களுடன் சசி தரூா் குழு சந்திப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அமெரிக்கா சென்றடைந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு அந்நாட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினா்களை புதன்கிழமை சந்தித்தது. அப்போது எல்... மேலும் பார்க்க