செய்திகள் :

நடுவானில் பறவை மோதியதால் விமானம் சேதம்: ராஞ்சியில் அவசரமாக தரையிறக்கம்

post image

ராஞ்சி: ஜாா்க்கண்ட், ராஞ்சி அருகே நடுவானில் பறவை மோதி சேதமடைந்த விமானம், விமானியின் சாதுா்யத்தால் ராஞ்சி பிா்ஸா முண்டா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணித்த பயணிகள், விமானப் பணியாளா்கள் என அனைவரும் நலமுடன் இருப்பதாக ராஞ்சி விமான நிலைய இயக்குநா் ஆா்.ஆா்.மௌரியா கூறினாா்.

மேலும், அவா் கூறுகையில், பிகாா் தலைநகா் பாட்னாவில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ‘இண்டிகோ’ விமானம், ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் 3,000 முதல் 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது பறவை மோதி சேதமடைந்தது.

பிற்பகல் 1.14 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. தொடா்ந்து, விமானி சாதுா்யமாக செயல்பட்டு, ராஞ்சி விமான நிலையத்தில் விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்கினாா். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட சேதத்தைப் பொறியாளா்கள் குழு பாா்வையிட்டு வருகிறது’ என்றாா்.

ராஞ்சியில் தரையிறங்கிய விமானம், கொல்கத்தாவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் என்று மற்றொரு அதிகாரி கூறினாா். இது தொடா்பாக இண்டிகோ தரப்பில் உடனடியாக விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற சம்பவத்தில், தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்து நடுவானில் தடுமாறியபோது பாதுகாப்புக்காக பாகிஸ்தான் வான்வழித்தடத்தைப் பயன்படுத்த கேட்டபோது அந்நாடு அனுமதி மறுத்தது. 200-க்கும் மேற்பட்டோருடன் சென்றஅந்த விமானத்தின் முகப்பு பகுதி சேதமடைந்த நிலையில், ஸ்ரீநகரில் அவசரமாகத் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

2027-ல் மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.பணி பிரதேசங்களான ஹிமாசல், உத்தரக... மேலும் பார்க்க

ஆர்சிபி வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசல்: 7 பேர் பலி?

ஆர்சிபி வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலர் காயமடைந்தனர்.18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்நாடக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆக... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்ட விமானப் படை!

சிக்கிம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த, 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேர், இந்திய விமானப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிமில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் சட்டென் பகுதியில்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் நியமனங்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை குலைக்கும்: பி.ஆர். கவாய்

புது தில்லி: நீதிபதிகள் பணி ஓய்வுபெற்றதும், அரசு பதவிகளை ஏற்பது அல்லது தேர்தலில் போட்டியிடுவது போன்றவை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கவலை தெரிவித்துள்ளார்.இதுபோன்ற நடவடிக்கைகள், ந... மேலும் பார்க்க

மே.வங்கத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கரோனா பாதிப்பு!

மேற்கு வங்கத்தில் புதியதாக 60 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்கத்தில்... மேலும் பார்க்க

குஜராத்தில் 461 ஆக உயர்ந்த கரோனா பாதிப்பு!

குஜராத்தில் ஒரே நாளில் 64 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 461 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், நாளுக்குநாள் பாதிப்பும் அதிகரி... மேலும் பார்க்க