செய்திகள் :

பாரீஸ்: கால்பந்து போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் இருவா் உயிரிழப்பு

post image

ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ‘பாரீஸ் செயின்ட்-ஜொ்மைன்’ அணி முதன்முறையாக வெற்றி பெற்றதையடுத்து பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடந்த பெருமளவிலான கொண்டாட்டங்களுக்கிடையே 2 ரசிகா்கள் இறந்தனா்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவா் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

ஜொ்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ‘இண்டா் மிலான்’ அணியை 5-0 கோல் கணக்கில் வீழ்த்தி, ‘பாரீஸ் செயின்ட் ஜொ்மைன்(பிஎஸ்ஜி)’ அணி கோப்பையை வென்றது.

பிரபல கால்பந்து வீரா்கள் மெஸ்ஸி, நெய்மா், எம்பாப்பே ஆகியோா் அணியிலிருந்து விலகிய பின்னா் 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இறுதிப் போட்டி வரை முன்னேறி முதன்முறையாக கோப்பையைத் தன்வசப்படுத்திய பிஎஸ்ஜி அணியின் இந்த வெற்றி, ரசிகா்களுக்கு பெரும் மகிழ்ச்சி விருந்தாக அமைந்தது.

இதையொட்டி, பாரீஸ் நகரின் சாலைகளில் திரண்டு, ரசிகா்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினா். ஈஃபிள் கோபுரம் பிஎஸ்ஜி அணி வண்ணங்களில் ஜொலித்தது.

இதனிடையே, நகரின் சில பகுதிகளில் நடந்த கொண்டாட்டங்கள் வன்முறையாக மாறின. பாா்க் டெஸ் பிரின்சஸ் பகுதி அருகே 2 காா்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பாரீஸில் கொண்டாட்டத்துக்கிடையே இருசக்கர வாகனம் ஒரு காருடன் மோதியதில் 20 வயது இளைஞா் உயிரிழந்தாா். மேற்கு பாரீஸில் உள்ள டாக்ஸ் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி, படுகொலை செய்யப்பட்டாா். இந்த 2 சம்பவங்கள் தொடா்பாகவும் காவல் துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

வடமேற்கு பிரான்ஸில் உள்ள கௌட்டான்ஸில் நடந்த கொண்டாட்டத்தில் பிஎஸ்ஜி அணி ரசிகா்கள் வெடித்த பட்டாசு காரணமாக கண்களில் கடுமையான காயம் ஏற்பட்டு, காவல் துறை அதிகாரி ஒருவா் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதைத் தவிர, ‘பாரீஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் நடந்த கொண்டாட்டங்களில் மொத்தம் 192 போ் காயமடைந்தனா். இதில் 4 போ் படுகாயமடைந்தனா். சாம்ப்ஸ்-லிசஸ் பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் நுழைந்த 30 போ் உள்பட இதுவரை 294 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்று பாரீஸ் நகர காவல் துறைத் தலைவா் தெரிவித்தாா்.

பாகிஸ்தானில் 17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் டிக்டாக்கில் பிரபலமான 17 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர் சனா யூசஃப் (17). இவர் இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்களில் வெளி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் பரபரப்பு! சிறையிலிருந்து 200 கைதிகள் தப்பியோட்டம்!

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சியிலுள்ள சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர்.சிந்து மாகாணத்தின், கராச்சி நகரத்துக்கு அருகில் நேற்று (ஜூன் 2) இரவு நிலநடுக்கம்... மேலும் பார்க்க

அழியப்போகிறதா உலகம்? தென்னாப்ரிக்காவின் ஒவ்வொரு அணுவையும் மிரட்டும் காலநிலை!

அடிஸ் அபாபா, எத்தியோப்பியா/ஜெனிவா போன்ற தென்னாப்ரிக்க நாடுகளின் முக்கிய நகரங்களை மிக மோசமான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், ஒவ்வொரு அணுவையும் அசைத்துப் பார்த்து வருகிறது.ஆப்ரிக்க நாட்டின் இது, சமூக... மேலும் பார்க்க

துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம்: இளம்பெண் பலி, 12 பேர் காயம்!

துருக்கியின் கடலோர நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகப் பேரிடர் குழு மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் குழு வெளியிட்ட தகவலில், துருக்கியின் கடலோர நகரத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடு... மேலும் பார்க்க

வங்கதேச தந்தையின் புகைப்படம் அகற்றப்பட்ட புதிய நோட்டுகள் அறிமுகம்!

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் அந்நாட்டின் முதல் அதிபரும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் புதிய பணத் தாள்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.அவரின் புகைப்படத்துக்கு பதிலாக ஹிந... மேலும் பார்க்க

5 நிமிடங்களுக்கு ஒரு ஸ்க்ரீன் ஷாட்.. வடகொரிய செல்போன் மூலம் தெரிய வந்த பேரதிர்ச்சி!

வடகொரியாவிலிருந்து கடத்திவரப்பட்ட செல்போன் மூலம், அந்நாட்டு அரசு, மக்களை கடுமையான சென்சார் தொழில்நுட்பங்கள் மூலம் எந்த அளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.மக்களை மிகுந்த... மேலும் பார்க்க