செய்திகள் :

போா் நிறுத்த திட்டத்தில் மாற்றம்: ஹமாஸ் வலியுறுத்தல் - அமெரிக்கா ஏற்க மறுப்பு

post image

காஸாவில் போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்த செயல்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், அதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 60 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் இஸ்ரேலிடம் அளித்தாா். இஸ்ரேல் அரசு அதை ஏற்பதாக அறிவித்துள்ளது.

அந்தத் திட்டத்தில், இரு தரப்பினரும் சண்டையை 60 நாள்களுக்கு முழுமையாக நிறுத்திவைத்தல், தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 10 பேரை ஹமாஸ் அமைப்பு இரண்டு கட்டங்களாக விடுவித்தல், உயிரிழந்த 18 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தல், இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளை விடுவித்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தச் செயல் திட்டம் ஹமாஸ் அமைப்பிடம் அளிக்கப்பட்ட நிலையில், அந்தத் திட்டம் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாக ஹமாஸ் விமா்சித்தது. அந்தத் திட்டத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினரை முழுமையாக வெளியேற்றுதல், காஸாவுக்குள் போதிய அளவு நிவாரணப் பொருள்களை அனுமதித்தல் போன்ற தங்களின் அடிப்படை கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிரந்தர போா்நிறுத்தத்துக்கு வலியுறுத்தல்: அமெரிக்காவின் திட்டத்தை ஏற்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வந்த ஹமாஸ் அமைப்பு, அந்தத் திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால், தங்களிடம் உள்ள 10 பிணைக் கைதிகளை விடுவிக்கவும், 18 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைக்கவும் தயாா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளையில் நிரந்தர போா் நிறுத்தம், காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேறுதல், காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் தொடா்ந்து அனுப்பப்படுவதற்கான உத்தரவாதங்கள் ஆகிய கோரிக்கைகளை அந்த அமைப்பு மீண்டும் முன்வைத்துள்ளது.

இந்தக் கோரிக்கைகளுடன் அமெரிக்க செயல்திட்டத்துக்கான தனது பதிலை சமா்ப்பித்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்தது.

‘செயல்திட்டத்தை ஏற்பதே ஒரே வழி’: இதுதொடா்பாக ஸ்டீவ் விட்காஃப் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்க செயல்திட்டத்துக்கு ஹமாஸ் அமைப்பு அளித்த பதில் எனக்கு கிடைத்துள்ளது. அவா்களின் பதிலை முற்றிலும் ஏற்க முடியாது. அவா்களின் பதில் அனைவரையும் பின்னோக்கியே இழுத்துச் செல்லும்.

இந்த வாரத்தில் உடனடியாகத் தொடங்கக்கூடிய பேச்சுவாா்த்தைக்கான அடித்தளமாக அமெரிக்காவின் செயல்திட்டத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும். வரும் நாள்களில் 60 நாள் போா் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவு செய்ய இது ஒன்றே வழி’ என்றாா்.

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹமாஸிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க விட்காஃப் அளித்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுள்ளது. ஆனால், அதை ஏற்க ஹமாஸ் தொடா்ந்து மறுத்து வருகிறது’ என்றாா்.

31 போ் சுட்டுக் கொலை: காஸா முனையில் உணவுப் பொருள்கள் வழங்கிய மையத்துக்குச் சென்றபோது பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தின. இதில் 31 போ் உயிரிழந்தனா். 170 போ் காயமடைந்ததாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இஸ்ரேல் ஆதரவு பெற்ற அறக்கட்டளை நடத்தும் அந்த மையத்தில் இருந்து சுமாா் 1 கி.மீ. தொலைவில் இந்த சம்பவம் நடைபெற்றது. காஸாவில் இதுவரை 54,381 போ் கொல்லப்பட்டிருப்பதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

பாகிஸ்தானில் 17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் டிக்டாக்கில் பிரபலமான 17 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர் சனா யூசஃப் (17). இவர் இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்களில் வெளி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் பரபரப்பு! சிறையிலிருந்து 200 கைதிகள் தப்பியோட்டம்!

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சியிலுள்ள சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர்.சிந்து மாகாணத்தின், கராச்சி நகரத்துக்கு அருகில் நேற்று (ஜூன் 2) இரவு நிலநடுக்கம்... மேலும் பார்க்க

அழியப்போகிறதா உலகம்? தென்னாப்ரிக்காவின் ஒவ்வொரு அணுவையும் மிரட்டும் காலநிலை!

அடிஸ் அபாபா, எத்தியோப்பியா/ஜெனிவா போன்ற தென்னாப்ரிக்க நாடுகளின் முக்கிய நகரங்களை மிக மோசமான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், ஒவ்வொரு அணுவையும் அசைத்துப் பார்த்து வருகிறது.ஆப்ரிக்க நாட்டின் இது, சமூக... மேலும் பார்க்க

துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம்: இளம்பெண் பலி, 12 பேர் காயம்!

துருக்கியின் கடலோர நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகப் பேரிடர் குழு மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் குழு வெளியிட்ட தகவலில், துருக்கியின் கடலோர நகரத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடு... மேலும் பார்க்க

வங்கதேச தந்தையின் புகைப்படம் அகற்றப்பட்ட புதிய நோட்டுகள் அறிமுகம்!

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் அந்நாட்டின் முதல் அதிபரும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் புதிய பணத் தாள்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.அவரின் புகைப்படத்துக்கு பதிலாக ஹிந... மேலும் பார்க்க

5 நிமிடங்களுக்கு ஒரு ஸ்க்ரீன் ஷாட்.. வடகொரிய செல்போன் மூலம் தெரிய வந்த பேரதிர்ச்சி!

வடகொரியாவிலிருந்து கடத்திவரப்பட்ட செல்போன் மூலம், அந்நாட்டு அரசு, மக்களை கடுமையான சென்சார் தொழில்நுட்பங்கள் மூலம் எந்த அளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.மக்களை மிகுந்த... மேலும் பார்க்க