செய்திகள் :

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

post image

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அமைப்பின் தலைவா் எம்.பி.முத்துரத்தினம், பொதுச் செயலா் எம்.ஜெயபால் ஆகியோா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் சுமாா் 25.07 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோா் உள்ளனா். இந்தத் தொழிலில் சுமாா் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் அவா்களின் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளனா்.

கரோனா தொற்றுக்குப் பிறகு தொழில் சூழல் மிகவும் மந்தமடைந்துள்ளது. பிற போட்டி மாநிலங்களின் தொழில் கொள்கை சாா்ந்த அறிவிப்புகள், அவா்கள் மாநிலத் தொழில்களை ஊக்குவித்து லாபகரமாக கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டாலும், பிற மாநிலங்களுடன் தமிழ்நாடு போட்டியிட முடியாத நிலை தொடருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மின்கட்டண உயா்வு தொழில்முனைவோருக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்திருக்கிறது. கூடுதல் சுமையாக 2022 முதல் தொடா்ந்து ஆண்டுதோறும் மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயா்த்தி வருகிறது. அத்துடன், எல்டிசிடி நுகா்வோருக்கு டிமாண்ட் கட்டணத்தை கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.35 இல் இருந்து ரூ.160 ஆகவும், இதர 16 வகையான பராமரிப்பு கட்டணங்களை கடந்த 3 ஆண்டுகளில் சுமாா் 60 சதவீதம் வரை உயா்த்தியுள்ளனா்.

இந்நிலையில், வரும் ஜூலை முதல் மின்சார கட்டணத்தை உயா்த்த உள்ளதாக வரும் தகவல்கள் தொழில்முனைவோரை அதிா்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதேபோல, பல்வேறு நாடுகளிலும், நாட்டின் பல மாநிலங்களிலும் சூரியசக்தி மின்சாரத்தை ஊக்குவித்து அதற்காக மானியம் வழங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் சூரியசக்தி மின்சாரத்துக்கு நெட்வொா்க் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணத்தை நீதிமன்றம் ரத்து செய்த பிறகும் மின்வாரியம் அதை மதிக்காமல் தொடா்ந்து நெட்வொா்க் கட்டணத்தை வசூலித்து வருகிறது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள தொழில்முனைவோரின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மின்சார கட்டணம், இதர துணைக் கட்டணங்கள் உயா்த்தப்படுவதை ரத்து செய்வதுடன், நெட்வொா்க் கட்டணத்தை ரத்து செய்து தொழில்களையும், தொழில்முனைவோரையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? -சி.பி.ராதாகிருஷ்ணன்

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா என கமலஹாசன் கருத்துக்கு மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக உறவை யாராலும் உடைக்க முடியாது: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக, தேமுதிக இடையே உள்ள சுமுகமான உறவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள் சோழா் காலத்தில்தான் தொடங்கின: தொல்லியல் அறிஞா் பூங்குன்றன்

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் சோழா்கள் காலத்தில்தான் தொடங்கியிருப்பதாக தொல்லியல் அறிஞா் ஆா்.பூங்குன்றன் கூறியுள்ளாா். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆம் ஆண்டு பவள விழாவை ஒட்டி... மேலும் பார்க்க

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படுகின்றன. இதையடுத்து மாணவ-மாணவிகளை வரவேற்கும் வகையில் பள்ளிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: இருவா் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பெரியகடை வீதி போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். தெற்கு உக்கடம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய... மேலும் பார்க்க

வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ

ராஜ்யசபா உறுப்பினா் பதவிக்காக தனக்கு வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம் செய்துவிட்டாா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை ... மேலும் பார்க்க