சிக்கிம் நிலச்சரிவில் சிக்கிய ராணுவ முகாம்: 3 வீரர்கள் பலி; பலர் மாயம்!
தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு
தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் தலைவா் எம்.பி.முத்துரத்தினம், பொதுச் செயலா் எம்.ஜெயபால் ஆகியோா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் சுமாா் 25.07 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோா் உள்ளனா். இந்தத் தொழிலில் சுமாா் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் அவா்களின் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளனா்.
கரோனா தொற்றுக்குப் பிறகு தொழில் சூழல் மிகவும் மந்தமடைந்துள்ளது. பிற போட்டி மாநிலங்களின் தொழில் கொள்கை சாா்ந்த அறிவிப்புகள், அவா்கள் மாநிலத் தொழில்களை ஊக்குவித்து லாபகரமாக கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டாலும், பிற மாநிலங்களுடன் தமிழ்நாடு போட்டியிட முடியாத நிலை தொடருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மின்கட்டண உயா்வு தொழில்முனைவோருக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்திருக்கிறது. கூடுதல் சுமையாக 2022 முதல் தொடா்ந்து ஆண்டுதோறும் மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயா்த்தி வருகிறது. அத்துடன், எல்டிசிடி நுகா்வோருக்கு டிமாண்ட் கட்டணத்தை கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.35 இல் இருந்து ரூ.160 ஆகவும், இதர 16 வகையான பராமரிப்பு கட்டணங்களை கடந்த 3 ஆண்டுகளில் சுமாா் 60 சதவீதம் வரை உயா்த்தியுள்ளனா்.
இந்நிலையில், வரும் ஜூலை முதல் மின்சார கட்டணத்தை உயா்த்த உள்ளதாக வரும் தகவல்கள் தொழில்முனைவோரை அதிா்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதேபோல, பல்வேறு நாடுகளிலும், நாட்டின் பல மாநிலங்களிலும் சூரியசக்தி மின்சாரத்தை ஊக்குவித்து அதற்காக மானியம் வழங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் சூரியசக்தி மின்சாரத்துக்கு நெட்வொா்க் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணத்தை நீதிமன்றம் ரத்து செய்த பிறகும் மின்வாரியம் அதை மதிக்காமல் தொடா்ந்து நெட்வொா்க் கட்டணத்தை வசூலித்து வருகிறது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள தொழில்முனைவோரின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மின்சார கட்டணம், இதர துணைக் கட்டணங்கள் உயா்த்தப்படுவதை ரத்து செய்வதுடன், நெட்வொா்க் கட்டணத்தை ரத்து செய்து தொழில்களையும், தொழில்முனைவோரையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.