ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
போதை மாத்திரைகள் விற்பனை: இருவா் கைது
கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை பெரியகடை வீதி போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். தெற்கு உக்கடம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய இரண்டு இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
அப்போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால் அவா்களிடம் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக மலுமிச்சம்பட்டி அவ்வை நகரைச் சோ்ந்த சூா்யா (23), கேரள மாநிலம், பாலக்காட்டை சோ்ந்த சஞ்ஜய் (20) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 45 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.