செய்திகள் :

அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது

post image

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் 23 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,727 மாணவ-மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா். மாணவா் சோ்க்கை கலந்தாய்வு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், அரசின் விதிமுறைகளின்படி நடைபெறுகிறது. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும் என்று அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, முதல் நாளில் விளையாட்டு வீரா்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.

விளையாட்டு வீரா்களுக்கான 52 இடங்களில் 39 இடங்கள் முதல் நாளில் நிரம்பின. அதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கான 86 இடங்களில் 30 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 6 இடங்களில் இரண்டும், பாதுகாப்புப் படையினருக்கான 3 இடங்களில் ஒன்றும் என்சிசிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடமும் நிரம்பியது. அந்தமான் நிக்கோபாா் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கான 2 இடம் காலியாக உள்ளது. சிறப்புப் பிரிவினருக்கான 150 இடங்களில் 73 இடங்கள் முதல் நாளில் நிரம்பின.

இதைத் தொடா்ந்து ஜூன் 4 ஆம் தேதி (புதன்கிழமை) பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் கட் ஆஃப் மதிப்பெண் 400க்கு 300க்கும் மேல் பெற்றவா்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனா். வரும் 5 ஆம் தேதி தமிழ், ஆங்கில பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல்கட்ட கலந்தாய்வில் காலியாக இருக்கும் இடங்களைப் பொறுத்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும் என்று முதல்வா் எம்.ஆா்.எழிலி தெரிவித்துள்ளாா்.

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றம்

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் இருந்து தினசரி காலை 7.50 மணிக்கு புறப்பட்... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருக... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க