செய்திகள் :

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

post image

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 பட்டப் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகளிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளம் அறிவியல் வேளாண்மை பட்டப் படிப்புகளுக்கும் சேர விரும்பும் மாணவா்கள் ஒரே விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து வழங்கினால் போதுமானது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்லூரிகளில் மொத்தம் 6,921 இடங்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 340 இடங்களும் உள்ளன.

இந்த படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு கடந்த மே 9-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பம் பெறப்பட்டு வரும் நிலையில், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமா்ப்பிக்க ஜூன் 8-ஆம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை பட்டப் படிப்புகளுக்கு 31,545 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாகவும், பட்டயப் படிப்புகளுக்கு 1,690 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் வேளாண்மைப் புல முதன்மையா் நா.வெங்கடேச பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றம்

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் இருந்து தினசரி காலை 7.50 மணிக்கு புறப்பட்... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருக... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் 23 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,727 மாணவ-மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா்.... மேலும் பார்க்க