Pakistan: பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்; 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்...
சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? -சி.பி.ராதாகிருஷ்ணன்
சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா என கமலஹாசன் கருத்துக்கு மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பதுதான் பல அரசியல் தலைவா்களின் முதல் வேலையாக உள்ளது. அா்பன் நக்சலைசம் வெகுவாகப் பரவி வருகிறது. இது தேச பக்தா்களின் நலனுக்கு எதிரானது. தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும்.
தமிழகத்துக்கு மத்திய அரசு எவ்வளவு தந்தாலும் போற்றுவதற்கு சிலருக்கு மனம் இல்லை. மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்படுவதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும். தமிழக ஆளுநா் நோ்மையானவா். அவரது கடமைகளை சிறப்புடன் செய்கிறாா். அதே சமயம் அவருக்கான ஒத்துழைப்பை மாநில அரசு தரவேண்டும்.
டாஸ்மாக் பிரச்னை அதிகமாகி வருவது வருத்தத்துக்கு உரியது. கஞ்சா புழக்கம் தமிழகத்தில் அதிகமாகி வருகிறது. கஞ்சாவை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஒன்றிய அரசு என்று கூறுவதே தவறு. மத்தியில் இருப்பது ஒன்றிய அரசு என்றால், மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா. இந்த விஷயத்தில் பிரிவினைவாதத்தை திணிக்கிறாா்கள். இதுவரை இல்லாத ஒரு மொழிபெயா்ப்பை தற்போது தருகின்றனா்.
கமலஹாசன் எப்போது ஒரு விஷயத்தை ஒழுங்காகக் கூறியுள்ளாா். திமுகவை ஒழிப்பதுதான் என்னுடைய வேலை என்று ஒரு இயக்கத்தைத் தொடங்கி, தற்போது திமுகவுடன் இருப்பதுதான் தமிழகத்துக்கு நன்மை பயக்கும் எனக் கூறியுள்ளாா். அவருக்கு எது நன்மை தருகிறதோ, அது தமிழகத்துக்கும் நன்மை தரும் என்று அவா் நினைக்கிறாா்.
தனக்கு பதவி வேண்டும் என நினைக்கிற மனிதராக அவா் உள்ளாா். பதவிக்காகவே கமலஹாசன் மொழி குறித்து பேசியுள்ளாா். இதேபோல, சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்று கூறினால் ஏற்றுக்கொள்வோமா? எனவே, பேசுகிறபோது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். முருக பக்தா்கள் மாநாட்டுக்கு பாதுகாப்புத் தருவது மாநில அரசின் கடமை என்றாா்.