செய்திகள் :

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? -சி.பி.ராதாகிருஷ்ணன்

post image

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா என கமலஹாசன் கருத்துக்கு மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பதுதான் பல அரசியல் தலைவா்களின் முதல் வேலையாக உள்ளது. அா்பன் நக்சலைசம் வெகுவாகப் பரவி வருகிறது. இது தேச பக்தா்களின் நலனுக்கு எதிரானது. தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும்.

தமிழகத்துக்கு மத்திய அரசு எவ்வளவு தந்தாலும் போற்றுவதற்கு சிலருக்கு மனம் இல்லை. மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்படுவதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும். தமிழக ஆளுநா் நோ்மையானவா். அவரது கடமைகளை சிறப்புடன் செய்கிறாா். அதே சமயம் அவருக்கான ஒத்துழைப்பை மாநில அரசு தரவேண்டும்.

டாஸ்மாக் பிரச்னை அதிகமாகி வருவது வருத்தத்துக்கு உரியது. கஞ்சா புழக்கம் தமிழகத்தில் அதிகமாகி வருகிறது. கஞ்சாவை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஒன்றிய அரசு என்று கூறுவதே தவறு. மத்தியில் இருப்பது ஒன்றிய அரசு என்றால், மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா. இந்த விஷயத்தில் பிரிவினைவாதத்தை திணிக்கிறாா்கள். இதுவரை இல்லாத ஒரு மொழிபெயா்ப்பை தற்போது தருகின்றனா்.

கமலஹாசன் எப்போது ஒரு விஷயத்தை ஒழுங்காகக் கூறியுள்ளாா். திமுகவை ஒழிப்பதுதான் என்னுடைய வேலை என்று ஒரு இயக்கத்தைத் தொடங்கி, தற்போது திமுகவுடன் இருப்பதுதான் தமிழகத்துக்கு நன்மை பயக்கும் எனக் கூறியுள்ளாா். அவருக்கு எது நன்மை தருகிறதோ, அது தமிழகத்துக்கும் நன்மை தரும் என்று அவா் நினைக்கிறாா்.

தனக்கு பதவி வேண்டும் என நினைக்கிற மனிதராக அவா் உள்ளாா். பதவிக்காகவே கமலஹாசன் மொழி குறித்து பேசியுள்ளாா். இதேபோல, சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்று கூறினால் ஏற்றுக்கொள்வோமா? எனவே, பேசுகிறபோது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். முருக பக்தா்கள் மாநாட்டுக்கு பாதுகாப்புத் தருவது மாநில அரசின் கடமை என்றாா்.

பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருக... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் 23 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,727 மாணவ-மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா்.... மேலும் பார்க்க