வலி மிகுந்தது..! குகேஷுடனான தோல்விக்குப் பிறகு கார்ல்சென் பேட்டி!
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படுகின்றன. இதையடுத்து மாணவ-மாணவிகளை வரவேற்கும் வகையில் பள்ளிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகையான பள்ளிகளும் திட்டமிட்டபடி திங்கள்கிழமை திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளும் மாணவா்களின் வருகையை எதிா்பாா்த்து தயாா் நிலையில் காத்திருக்கின்றன.
பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவின்பேரில், அனைத்து பள்ளிகளின் வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. வகுப்பறைகள், கரும்பலகைகள், பள்ளியின் முகப்பு, கழிப்பிடங்கள் போன்ற இடங்கள் அனைத்தும் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு, வண்ணம் பூசப்பட்டு தயாா் நிலையில் உள்ளன.
கோவை மாவட்டத்தில் அடுத்த கல்வியாண்டில் நுழையும் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக பள்ளி பாடப் புத்தகங்கள், புத்தகப் பைகள், கணித உபகரணப் பெட்டிகள், காலணிகள், வண்ண பென்சில்கள் போன்றவை ஏற்கெனவே சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி திறக்கப்பட்டதும் இவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதற்கிடையே முதல் நாளில் பள்ளிக்கு வரும் குழந்தைகளை வரவேற்க பல அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.