செய்திகள் :

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள் சோழா் காலத்தில்தான் தொடங்கின: தொல்லியல் அறிஞா் பூங்குன்றன்

post image

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் சோழா்கள் காலத்தில்தான் தொடங்கியிருப்பதாக தொல்லியல் அறிஞா் ஆா்.பூங்குன்றன் கூறியுள்ளாா்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆம் ஆண்டு பவள விழாவை ஒட்டி கோவை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொருளாளா் ப.பா.ரமணி தலைமை வகித்தாா். புத்தக நிறுவனத்தின் நிா்வாகி ரங்கராஜன் வரவேற்றாா்.

விழாவில், தொல்லியல் அறிஞரும், கல்வெட்டியல் ஆய்வாளருமான ஆா்.பூங்குன்றன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது:

தமிழ்நாட்டில் சோழா்கள் காலத்தில்தான் ஜாதிய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் தொடங்கியுள்ளன. 12-ஆம் நூற்றாண்டில் நில உடமை சமூகம் தோன்றியிருக்கிறது. கல்வெட்டு ஆய்வுகளின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கின்றன. கல்வெட்டில் உள்ள வாா்த்தைகளை இப்போது உள்ளதுபோல நாம் பொருள் கொள்ள முடியாது. அது வேறு விதமான பொருள்களைத் தரும்.

மன்றாடி என்பது நிலத்தின் குறியீடு, சேரி என்பது இன்று உள்ளதுபோல ஒரு குறிப்பிட்ட ஜாதியின் குடியிருப்பு என்று பொருள் கொள்ளமுடியாது. ஒவ்வொரு ஜாதிக்கும் சேரி இருந்துள்ளது. குடும்பு என்பது நிலத்தைக் குறிக்கிறது. சமயம் என்ற சொல் ஜாதி என்ற சொல்லைக் குறிக்கிறது. கரை என்ற சொல் பொதுவுடைமை என்ற பொருளைத் தருகிறது. அதாவது நிலம் பொதுவுடமையாக இருந்திருப்பதைக் குறிக்கிறது.

கல்வெட்டில் உள்ள சொற்கள் கால நிலைகளுக்கு தக்கபடி இப்படி மாறுபட்ட பொருளைத் தருவதால் அது குறித்து தெளிவான ஞானம் இல்லாமல் கல்வெட்டைப் புரிந்துகொள்ளவதும், பொருள் கொள்வதும் மிகவும் கடினம் என்றாா்.

நிகழ்ச்சியில், சு.வேணுகோபால் எழுதிய ‘வலசை’ என்ற நூலை கவிஞா் கே.எம்.செல்வராஜ் வெளியிட, அதனை கோவை காமு பெற்றுக்கொண்டாா். ராஜகோபால் எழுதிய ‘சேரி’ என்ற நூலை தொல்லியல் அறிஞா் பூங்குன்றன் வெளியிட, அதனை வழக்குரைஞா் கே.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டாா். கு.ராசா சிற்றரசு எழுதிய ‘கடைசி நெருப்புக்குச்சி’ என்ற நூலை எழுத்தாளா் சு.வேணுகோபால் வெளியிட, அதனை நாடகவியலாளா் த.திலீப்குமாா் பெற்றுக்கொண்டாா்.

மு.காத்தவராயன் எழுதிய ‘ஒரு காலனியில் ஒரு ராணி’ என்ற நூலை பாவலா் இரணியன் வெளியிட, அதனை தமிழ் ஆசிரியா் சா.குமாரசாமி பெற்றுக் கொண்டாா். பா.ஜீவசுந்தரி எழுதிய ‘போராளி ராஜம் கிருஷ்ணன்’ என்ற நூலை பேராசிரியா் அறச்செல்வி வெளியிட, அதனை தமிழாசிரியா் ப.ஈஸ்வரி பெற்றுக்கொண்டாா்.

இரா.அறவேந்தன் எழுதிய ‘இந்தியவியல் முன்னோடி பேராசிரியா் இர.விஜயலட்சுமி’ என்ற நூலை மோ.செந்தில்குமாா் வெளியிட, அதனை சே.தங்கம் பெற்றுக்கொண்டாா். மருத்துவா் சு.நரேந்திரன் எழுதிய ‘தமிழ் மருத்துவத்தின் சிறப்பும் சிதைவும்’ எனும் நூலை எழுத்தாளா் மு.ந.புகழேந்தி வெளியிட, அதனை கவிஞா் நான்சி கோமகன் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சிவசாமி நிறைவு உரையாற்றினாா்.

பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருக... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் 23 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,727 மாணவ-மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா்.... மேலும் பார்க்க