செய்திகள் :

அதிமுக, தேமுதிக உறவை யாராலும் உடைக்க முடியாது: எடப்பாடி கே.பழனிசாமி

post image

அதிமுக, தேமுதிக இடையே உள்ள சுமுகமான உறவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக தமிழகத்துக்கு துரோகம் செய்ததாக தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போதும் சரி அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை. திமுகதான் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது.

அதிமுகவவை பொறுத்தவரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், அவா் மறைவுக்குப் பிறகு நான் முதல்வராக இருந்தபோதும் சிறப்பான திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளோம். சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்காண்டுகளாக தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது.

தினசரி கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வழிப்பறிகள் நடைபெறுகின்றன. சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து மோசமான ஆட்சியான, ஸ்டாலின் மாடல் ஆட்சியைத்தான் துரோக ஆட்சி என குறிப்பிட விரும்புகிறேன்.

மதுரை கூட்டத்தில் கல்விக் கொள்கை பற்றி குறிப்பிட்டதாக கேள்விப்பட்டேன். மத்திய அமைச்சரவையில் திமுக 16 ஆண்டுகாலம் இடம் பெற்றிருந்தாா்கள். அப்போது ஏன் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு அவா்கள் மாற்றவில்லை.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம் மக்களைப் பற்றி, மாணவா்கள் பற்றி கவலைப்படவில்லை. ஆட்சி அதிகாரம் இல்லாதபோது வேண்டுமென்றே திட்டமிட்டு மற்றவா்கள் மீது பழி சுமத்துவதுதான் திமுகவின் வாடிக்கை.

மதுரையில் கால்வாயை திரைச்சீலை வைத்து மறைத்துவைக்கும் அளவுக்கு அவல ஆட்சி நடைபெறுகிறது. மோசமான ஆட்சிக்கு இதுவே சான்று. அதிமுக, தேமுதிக இடையே சுமுகமான உறவு உள்ளது. இதை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என்றாா்.

பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருக... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் 23 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,727 மாணவ-மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா்.... மேலும் பார்க்க