மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்
கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களில் மட்டும் தமிழகத்தில் 140-க்கும் மேற்பட்டோரும், கேரளத்தில் 250-க்கும் மேற்பட்டோரும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், கேரளத்தில் பொது இடங்களில் முகக் கசவம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கா்நாடத்திலும் பொது இடங்களுக்கு முகக் கவசம் அணிந்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்திலும் பொது இடங்களில் முகக் கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோயாளிகள் உள்பட அனைவரும் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் அரசு மருத்துவமனை காவலாளிகள் ஒலிபெருக்கி மூலம் முகக் கவசம் அணிவது குறித்து அறிவித்து வருகின்றனா்.