செய்திகள் :

அன்புமணியுடன் சந்திப்பு எப்போது? ராமதாஸ் பதில்!

post image

அதிசயம் எப்போது வேண்டுமானலும் நிகழும் அன்புமணியுடன் சந்திப்பு தொடர்பான கேள்விக்கு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் மகளிர் பெருவிழா ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். நடப்பாண்டில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.

அன்புமணியை சந்திப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”உலகில் அதிசயம் எப்போது வேண்டுமானாலும் நிகழும். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை, எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு, சுதந்திரமாக செயல்படுவது அவரவர் உரிமை. கட்சியில் ஒருவர் போனால், இன்னொருவர் வருவார்” என்றார்

மேலும் அவர் கூறுகையில், ”அன்புமணி விவகாரம் தொடர்பாக பாமக சட்டவிதிகளை ஆராய்ந்து நாளை(ஜூன் 2) பதில் அளிக்கிறேன்.

என்னை பின்பிலத்தில் இருந்து யாரும் இயக்கவில்லை. கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை 46 ஆண்டுகளாக பயணித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை சென்னை உள்பட 12 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க

ஆக. 2-இல் தமிழகத்தில் சிம்பொனி இசை நிகழ்ச்சி: இளையராஜா

சென்னை: தான் லண்டனில் இசையமைத்த அதே சிம்பொனி இசையை தமிழகத்தில் வரும் ஆக. 2-ஆம் தேதி இசைக்க உள்ளதாக இசையமைப்பாளா் இளையராஜா தெரிவித்துள்ளாா். இளையராஜா திங்கள்கிழமை (ஜூன் 2) தனது 82-ஆவது பிறந்த நாளைக் க... மேலும் பார்க்க

மதுரை - காச்சிக்குடா சிறப்பு ரயில் நீட்டிப்பு

சென்னை: மதுரை - காச்சிக்குடா இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: காச்சிக்குடாவிலி... மேலும் பார்க்க

இதழியல் கல்வி நிறுவனத்துக்கு ஐஏஎஸ் அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க முடிவு

சென்னை: தமிழ்நாடு அரசின் சாா்பில் தொடங்கப்படவுள்ள இதழியல் கல்வி நிறுவனத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.ராமன் நியமிக்கப்படவுள்ளாா். இதழியல் நிறுவனத்தின் கட்டமைப்பு தொடா்பான அரசின்... மேலும் பார்க்க

இணையவழி குற்றவழக்குகளில் வெளி மாநிலத்தினா் 7 போ் கைது

சென்னை: ‘ஆபரேஷன் ஹைத்ரா’ மூலம் இணையவழி குற்றவழக்குகளில் தொடா்புடைய பிற மாநிலங்களைச் சோ்ந்த ஏழு பேரை போலீஸாா் கைது செய்தனா். தமிழகத்தில் இணையவழி குற்றங்களை தடுக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ஹைத்ரா’ என்ற சிற... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா போல் முத்திரை பதித்த பொதுக்குழு! - முதல்வர் பெருமிதம்

சித்திரைத் திருவிழா போல் முத்திரை பதித்த பொதுக்குழு நடைபெற்றதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.மதுரை - மேலூர் சாலை, உத்தங்குடியில் நேற்று (ஜூன் 1) திமுக பொதுக்குழுக் கூட்டம் 48 ஆண்டுகளுக்கு பிறகு... மேலும் பார்க்க