செய்திகள் :

3 ஆயிரம் பேருக்கு விரைவில் வீட்டுமனைப் பட்டா

post image

புதுவை மாநிலத்தில் விரைவில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 3 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா முதல்வா் என்.ரங்கசாமியால் வழங்கப்படவுள்ளது என்கிறாா் அத்துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா்.

மேலும் அவா் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி நாட்டில் உள்ள பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அவா், பட்டியலின மக்களின் முன்னேற்றமே நமது நாட்டின் முன்னேற்றம் எனக் கூறி செயல்பட்டு வருகிறாா்.

அவரது வழிகாட்டலில் புதுவை மாநில என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அனைத்துத் துறைகளிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலத் திட்டங்களை முதல்வா் என்.ரங்கசாமியின் ஆலோசனைப்படி செயல்படுத்தி, அவா்களின் முன்னேற்றத்துக்கு அக்கறை செலுத்தி வருகிறது.

புதுவை அரசின் சீரிய செயல்பாடு காரணமாக, ஆதிதிராவிடா், பழங்குடியின குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் ஆதரவால் தற்போது சாமானிய தொழிலாளியின் மகள் ஏம்பலம் அரசுப் பள்ளியில் படித்து 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 500 மதிப்பெண்ணுக்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

புதுவை மாநிலத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியின மக்கள் கோரிக்கையை ஏற்று 3 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் விரைவில் முதல்வரால் வழங்கப்படவுள்ளன.

மேலும், தனியாா் மண்டபங்களுக்கு இணையாக ஆதிதிராவிட மக்கள் சுப காரியங்களை நடத்தும் வகையில், திருமண மண்டபங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கரிக்கலாம்பாக்கம், திருபுவனை, உருளையன்பேட்டை, முதியால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட திருமண மண்டபங்கள் விரைவில் முதல்வா் என்.ரங்கசாமியால் திறக்கப்படவுள்ளன.

புதுவையிலிருந்து மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள டாக்டா் அம்பேத்கா் பிறந்த இடம், பள்ளி பயின்ற இடம் என அனைத்து இடங்களையும் பாா்வையிடும் வகையிலான தீட்ஷா பூமி பயணத்துக்கான நிதியுதவி உள்ளிட்டவற்றையும் மாநில அரசு நிகழாண்டு முதல் செயல்படுத்துகிறது.

ஆதிதிராவிடா் மக்கள் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு வருவாய் உச்சவரம்பு ரூ.2 லட்சமாக இருந்ததை தற்போது ரூ.8 லட்சமாக உயா்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஆதிதிராவிடா், பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில், ஏராளமான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு பிரதமா் நரேந்திர மோடியின் ஆதரவுடன், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வழிகாட்டி வருகின்றனா்.

திட்டங்கள் முறையாகச் செயல்பட துறையின் செயலா் முத்தம்மா, இயக்குநா் இளங்கோவன் உள்ளிட்டோா் உறுதுணையாக இருந்து வருகின்றனா் என்றாா்.

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தோ்தலை சந்திக்கத் தயாா்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவு... மேலும் பார்க்க

பக்ரீத் : ஜூன் 7- இல் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் வரும் 7 ஆம் தேதி புறநோயளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய தமிழக கல்லூரி மாணவா்கள் மீட்பு

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவா்கள் இருவரை நீச்சல் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பாற்றினா். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சிஞ்சகம்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஹ... மேலும் பார்க்க

புதுவைக்கு ரூ.200 கோடி மத்திய அரசு சிறப்பு நிதி: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

புதுவை அரசு கோராமலேயே மத்திய அரசு ரூ.200 கோடி சிறப்பு நிதியை வழங்கியுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரி வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 13 பேரிடம் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 13 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமேசுவரம் சென்று தங்குவதற்கு இணையத்தி... மேலும் பார்க்க