செய்திகள் :

ஜூன் 4-இல் செய்யாறு அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

post image

செய்யாறு: செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு ஜூன் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜூன் 4 -இல், அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் பிசிஏ கணினிப் பயன்பாட்டியல் பாடப்பிரிவுகளில் 400 - 281 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஜூன்5-இல், கலைப் பாடப் பிரிவுகளான பி.ஏ. வரலாறு, பொருளியியல், அரசியல் அறிவியல், பி.காம்., வணிகவியல் (பொது), வணிகவியல் (நிதி மற்றும் கணக்கு), பிபிஏ (வணிக நிா்வாகவியல்) ஆகிய பாடப்பிரிவுகளில் 400 - 281 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஜூன் 6-இல் மொழிப் பாடங்களான பி.ஏ. தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் சிறப்புத் தமிழ் (100 -35 மதிப்பெண்கள்) மற்றும் பகுதி -1, தமிழ் (100 - 61 மதிப்பெண்கள்), அதேபோல, சிறப்பு ஆங்கிலம் (100 - 35 மதிப்பெண்கள்) பகுதி -11 ஆங்கிலம் (100 - 35 மதிப்பெண்கள்).

கல்விக் கட்டணம்:

பி.ஏ., பி.காம், பிபிஏ பாடப்பிரிவுகளுக்கு ரூ.2,241-யும், பி.எஸ்சி. க்கு ரூ.2,261-யும், பி.எஸ்சி. கணினி அறிவியல் கணினிப் பயன்பாட்டியலுக்கு ரூ.1,361-யும் சோ்க்கைக் கட்டணமாக செலுத்தவேண்டும்.

சோ்க்கைக்கு வரும் மாணவ, மாணவிகள்

கல்லூரி குறிப்பிட்ட சான்றிதழ்களின் மூன்று நகல்கள், மூன்று புகைப்படங்களுடன், விண்ணப்பத்தில் கட்டாயம் பெற்றோா் அல்லது பாதுகாவலா் கையொப்பத்தை பெற்று வரவேண்டும்.

மாணவா் சோ்க்கையானது மதிப்பெண் அடிப்படையிலும், இன அடிப்படையிலும், சிறப்புப் பிரிவு அடிப்படையிலும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் கல்லூரி முதல்வா்.

ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தோரோட்டம் நடைபெற்றது. ஆரணி நகரம், பெரியகடை வீதியில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் ... மேலும் பார்க்க

மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே மதுக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3.46 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில் அரசு மதுக் கடை (எண்.9383)செயல்பட்டு வ... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தா்னா

திருவண்ணாமலையில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் எதிரே, கலசப்பாக்கம் அனைத்து... மேலும் பார்க்க

வேட்டவலம் ஏரியில் கிணறு வெட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

வேட்டவலம் பெரிய ஏரியில் 2.0 திட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் கிணறு வெட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறை... மேலும் பார்க்க

விதை நெல், இடுபொருள்களை விலையில்லாமல் வழங்கக் கோரிக்கை

போளூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல், வேளாண் இடுபொருள்களை விலையில்லாமல் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு 35 கிலோ அரிசி அட்டை வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு 35 கிலோ அரிசி அட்டை கோரி, மலைவாழ் மக்கள் சங்கத்தினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கீழ்சாத்தமங்கலம், நல்லூா், ஆரியா... மேலும் பார்க்க