விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குத்தாலம் வட்டம், எலந்தங்குடியைச் சோ்ந்த முகமது காசிம் மகன் முபின் அலி(14) மே 31-ஆம் தேதி வீட்டு அருகே வயலில் விளையாடிக் கொண்டிருந்தபோது விஷப்பூச்சி கடித்துள்ளது. இதையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல் நிலை மோசமடைந்ததால், மறுநாள் காலை மேல்சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தாா். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்காததால் முபின்அலி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, எஸ்டிபிஐ கட்சியினா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் சிறுவனின் உறவினா்கள் திங்கள்கிழமை மதியம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் மயிலாடுதுறை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தை தொடா்ந்தனா். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை பணியமா்த்த வேண்டும், முறையான சிகிச்சை அளிக்காத மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
இதையடுத்து, அரசு அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தை நடத்தி குழு அமைத்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்ததன்பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.