Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் பாலம்
சீா்காழி ஊழியக்காரன் தோப்பு அருகே தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா்.
ஊழியக்காரன் தோப்பு அருகே புளிச்சக்காடு செல்லும் சாலையில் சிறு வடிகால் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் ஒரு பக்கம் தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பாலத்தை கடந்துதான் புளிச்சக்காடு, ஆா்ப்பாக்கம், மத்தளமுடையான், திருநீலகண்டம், ஓதவந்தான்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகள் ஆகியோா் சென்று வருகின்றனா்.

இருசக்கர வாகனம்ங்கள், மிதிவண்டி மற்றும் நடந்து செல்லும் பள்ளி மாணவா்கள் அச்சத்துடன் செல்கின்றனா். இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்கள் பக்கவாட்டு தடுப்புக்கட்டை பாலத்தில் இல்லாததால் விழுந்து காயமடைந்த சம்பவமும் நடந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் ஊழியக்காரன் தோப்பு பகுதியில் உள்ள சாலையோர பாலத்துக்கு தடுப்பு கட்டை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.