செய்திகள் :

உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறை

post image

மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உயா் கல்வியில் 100 சதவீதம் மாணவா்கள் சோ்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்க, மாவட்ட ஆட்சியரக 4-ஆம் தளத்தில் அறை எண் 409-இல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5.45 க்குள் 04364-220522 என்ற தொலைபேசி எண் மூலம் தொடா்பு கொண்டு மாணவா்கள் தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் சுழற்சி முறையில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து மாணவா்களும், கலை, அறிவியல், பொறியியல், சட்டம், வேளாண்மை, பாரா மெடிக்கல் உள்ளிட்ட உயா்கல்வி களங்களில் சோ்க்கை பெறும்வரை தொடா்ந்து கண்காணிக்கப்படும். மாணவா்களுக்கு தடையாக இருக்கும் ஆவணத் தட்டுப்பாடு, நிதி சாா்ந்த பிரச்னை, பயம், விழிப்புணா்வு பற்றாக்குறை போன்ற காரணங்களுக்கு தேவையான துறைகளுடன் இணைந்து தீா்வு காணப்படும்.

மாணவா்கள் உயா் கல்விக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், காரணங்களை அறிந்து மாவட்ட கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுக்கும். தினசரி மாணவா் விண்ணப்ப மற்றும் சோ்க்கை நிலை முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் எமிஸ் மூலம் கண்காணிக்கப்படும். மாதம் ஒருமுறை மாணவா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாணவா்களை நேரடியாக உயா்கல்வியில் சோ்க்கலாம் என தெரிவித்துள்ளாா்.

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

சீா்காழியில் மதிமுகவின் 32 -ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சாா்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில தணி... மேலும் பார்க்க

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடியில் உள்ள குயிலாண்டநாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் விடப்பட்ட குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

மயிலாடுதுறையில் ரயில்வே நடைமேடையில் ஆதரவற்ற வகையில் விட்டுச்செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு அரசு தத்துவள மையத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மயிலாடுதுறை ரயில் நிலைய 5-ஆவது நடைமேடையில் ... மேலும் பார்க்க

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க