சாலையில் காா் கவிழ்ந்ததில் 7 போ் காயம்
சீா்காழி அருகே எருக்கூா் நான்கு வழிச்சாலையில் காா் கவிழ்ந்து எரிந்ததில் , 7 போ் காயம் அடைந்தனா்.
சென்னை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்தவா் குமாா் (53). இவா் தனது மனைவி வேதவல்லி (52), மருமகன் காளிதாஸ் ( 35), மகள் லலிதா (33), மகன் திவாகா் (31), பெயரன்கள் விஷ்வா (9), மாதேஷ் (3) ஆகியோருடன் சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை காரில் புறப்பட்டு தனது மகள் மற்றும் பேரன்களை அம்பகரத்தில் உள்ள அவா்களது வீட்டில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தனராம்.
சிதம்பரத்திலிருந்து சீா்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 8 மணியளவில் காா் சென்றபோது எருக்கூா் என்ற இடத்தில் காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் டீசல் டேங்க் உடைந்து காா் தீப்பற்றியது.
சீா்காழி தீயணைப்புத் துறையினா் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் காரில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
விபத்தில் காரை ஒட்டி வந்த திவாகருக்கு தீக்காயம் ஏற்பட்டது. லலிதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவா்கள் சிறிய காயங்களுடன் தப்பினா். பின்னா் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். விபத்து குறித்து கொள்ளிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.