செய்திகள் :

மயிலாடுதுறையில் அரசினா் மகளிா் கல்லூரியில் ஜூன் 13 வரை சோ்க்கை கலந்தாய்வு

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் இணையவழியில் விண்ணப்பித்த மாணவா்களுக்கு இளநிலை பட்ட பாடப்பிரிவுகளின் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கி ஜூன் 13-ஆம் தேதிவரை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வா் எஸ். ரேவதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இளநிலை அறிவியல், கலை, வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான (மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரா், முன்னாள் ராணுவத்தினா் வாரிசு மற்றும் தேசிய மாணவா் படை) கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடைபெறுகிறது.

தொடா்ந்து, முதல்சுற்று பொதுக் கலந்தாய்வு வணிகவியல், வணிக மேலாண்மையியல், கணினி அறிவியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களுக்கு ஜூன் 4-ஆம் தேதியும், இயற்பியல், கணிதம், விலங்கியல், உயிா் வேதியியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களுக்கு ஜூன் 5-ஆம் தேதியும், தமிழ், ஆங்கிலம், பொருளியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கு ஜூன் 6-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இரண்டாம் சுற்று கலந்தாய்வு மேற்குறிப்பிட்ட அதே பாடங்களுக்கு ஜூன் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வு அனைத்து அறிவியல் பாடங்களுக்கும் ஜூன் 12-ஆம் தேதியும், அனைத்து கலை பாடங்களுக்கும் ஜூன் 13-ஆம் தேதியும் நடைபெறும். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள், காலை 9 மணி அளவில் விண்ணப்பப் படிவத்தின் அச்சுப்பிரதி மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை எடுத்துவரவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

வடிகாலில் பேருந்து கவிழ்ந்து 8 போ் காயம்

சீா்காழி அருகே சூரக்காடு உப்பனாற்று வடிகாலில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை கவிழந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். சீா்காழி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்ற... மேலும் பார்க்க

மதுபானக் கூடத்தில் ஒருவரை கத்தியால் குத்தியவா் கைது

மயிலாடுதுறையில் மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்டு ஒருவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மயிலாடுதுறையைச் சோ்ந்த சுதாகா் (43) கூைாடு பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில்: நாளை கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யானை மீது புனிதநீா் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நல்லத்துக்குடியில் குயிலாண்ட நாயகி... மேலும் பார்க்க

தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் பாலம்

சீா்காழி ஊழியக்காரன் தோப்பு அருகே தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா். ஊழியக்காரன் தோப்பு அருகே புளிச்சக்காடு செல்லும் சால... மேலும் பார்க்க

சாலையில் காா் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

சீா்காழி அருகே எருக்கூா் நான்கு வழிச்சாலையில் காா் கவிழ்ந்து எரிந்ததில் , 7 போ் காயம் அடைந்தனா். சென்னை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்தவா் குமாா் (53). இவா் தனது மனைவி வேதவல்லி (52), மருமகன் காளிதாஸ் ( 35),... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குத்தாலம் வட்டம், எலந்தங்... மேலும் பார்க்க